FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, January 6, 2017

4000 திருமணங்களை நடத்தி வைத்த தனி ஒருவன்..!

01.01.2017
தனி ஒருவராக இருந்து சுமார் 4000 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர்,பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.பொது சேவைகளில் நாட்டம் உள்ள இவர்,கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் காது கேளாதோருக்கு இடையே சுமார் 4000 திருமணங்களை தன் சொந்த செலவில் நடத்தி வைத்துள்ளார்.

திருமண செலவுகளுக்கு பணம் வேண்டும் என்பதற்காகவே,தனது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி,சொந்த பங்களாவை விட்டுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 2000-ஆம் ஆண்டு காது கேளாதோருக்காக சுயம்வரா என்ற அறக்கட்டளையை தொடங்கிய இவர்,தற்போது ஏழ்மையில் உள்ள காதுகேளாதோர் படிப்பதற்காக தனது அறக்கட்டளை மூலம் பள்ளி ஒன்றையும் துவங்கியுள்ளார்.

“நான் திருமணம் செய்து வைத்த அனைவருமே எனது மகன்,மகள் தான்.அப்படி பார்த்தால் எனக்கு கிட்டத்தட்ட 8,000 பிள்ளைகள்.நான் திருமணம் செய்து வைத்த அனைவரும் என்னை அப்பா எனவும்,அவர்களுடைய குழந்தைகள் தாத்தா எனவும் தான் அழைப்பார்கள்.இதைப் பார்த்து என் மகன் கூட பொறாமைப்படுவான்.”என்கிறார் விஜயராஜ்.

அவருடைய இந்த பொதுச் சேவைக்கு அவருடைய மனைவி பக்கபலமாக இருந்து வருகிறாராம்.


No comments:

Post a Comment