FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, January 6, 2017

4000 திருமணங்களை நடத்தி வைத்த தனி ஒருவன்..!

01.01.2017
தனி ஒருவராக இருந்து சுமார் 4000 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர்,பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.பொது சேவைகளில் நாட்டம் உள்ள இவர்,கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் காது கேளாதோருக்கு இடையே சுமார் 4000 திருமணங்களை தன் சொந்த செலவில் நடத்தி வைத்துள்ளார்.

திருமண செலவுகளுக்கு பணம் வேண்டும் என்பதற்காகவே,தனது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி,சொந்த பங்களாவை விட்டுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 2000-ஆம் ஆண்டு காது கேளாதோருக்காக சுயம்வரா என்ற அறக்கட்டளையை தொடங்கிய இவர்,தற்போது ஏழ்மையில் உள்ள காதுகேளாதோர் படிப்பதற்காக தனது அறக்கட்டளை மூலம் பள்ளி ஒன்றையும் துவங்கியுள்ளார்.

“நான் திருமணம் செய்து வைத்த அனைவருமே எனது மகன்,மகள் தான்.அப்படி பார்த்தால் எனக்கு கிட்டத்தட்ட 8,000 பிள்ளைகள்.நான் திருமணம் செய்து வைத்த அனைவரும் என்னை அப்பா எனவும்,அவர்களுடைய குழந்தைகள் தாத்தா எனவும் தான் அழைப்பார்கள்.இதைப் பார்த்து என் மகன் கூட பொறாமைப்படுவான்.”என்கிறார் விஜயராஜ்.

அவருடைய இந்த பொதுச் சேவைக்கு அவருடைய மனைவி பக்கபலமாக இருந்து வருகிறாராம்.


No comments:

Post a Comment