FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, January 6, 2017

4000 திருமணங்களை நடத்தி வைத்த தனி ஒருவன்..!

01.01.2017
தனி ஒருவராக இருந்து சுமார் 4000 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர்,பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.பொது சேவைகளில் நாட்டம் உள்ள இவர்,கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் காது கேளாதோருக்கு இடையே சுமார் 4000 திருமணங்களை தன் சொந்த செலவில் நடத்தி வைத்துள்ளார்.

திருமண செலவுகளுக்கு பணம் வேண்டும் என்பதற்காகவே,தனது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி,சொந்த பங்களாவை விட்டுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 2000-ஆம் ஆண்டு காது கேளாதோருக்காக சுயம்வரா என்ற அறக்கட்டளையை தொடங்கிய இவர்,தற்போது ஏழ்மையில் உள்ள காதுகேளாதோர் படிப்பதற்காக தனது அறக்கட்டளை மூலம் பள்ளி ஒன்றையும் துவங்கியுள்ளார்.

“நான் திருமணம் செய்து வைத்த அனைவருமே எனது மகன்,மகள் தான்.அப்படி பார்த்தால் எனக்கு கிட்டத்தட்ட 8,000 பிள்ளைகள்.நான் திருமணம் செய்து வைத்த அனைவரும் என்னை அப்பா எனவும்,அவர்களுடைய குழந்தைகள் தாத்தா எனவும் தான் அழைப்பார்கள்.இதைப் பார்த்து என் மகன் கூட பொறாமைப்படுவான்.”என்கிறார் விஜயராஜ்.

அவருடைய இந்த பொதுச் சேவைக்கு அவருடைய மனைவி பக்கபலமாக இருந்து வருகிறாராம்.


No comments:

Post a Comment