FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 26, 2017

செவித்திறன் பாதித்த ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பு

24.01.2017
செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செவித்திறன் குறைபாடு 60 டெசிபல் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்படுகிறது. இதுவரை அனைத்து ஊழியர்களுக்கும் பயணப் படியாக மாதந்தோறும் ரூ.1,600 வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுகாதாரத்துறையின் பரிந்துரையின்பேரில் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படியாக மாதந்தோறும் ரூ.3,200 வழங்கப்படும்.

முழுமையாக காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என அந்த அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. தமிழ்நாடு அரசு செவித்திறன் 69% பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை ஏதேனும் அரசு ஆனை இருக்கிறதா

    ReplyDelete