FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 26, 2017

செவித்திறன் பாதித்த ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பு

24.01.2017
செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செவித்திறன் குறைபாடு 60 டெசிபல் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்படுகிறது. இதுவரை அனைத்து ஊழியர்களுக்கும் பயணப் படியாக மாதந்தோறும் ரூ.1,600 வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுகாதாரத்துறையின் பரிந்துரையின்பேரில் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படியாக மாதந்தோறும் ரூ.3,200 வழங்கப்படும்.

முழுமையாக காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என அந்த அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. தமிழ்நாடு அரசு செவித்திறன் 69% பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை ஏதேனும் அரசு ஆனை இருக்கிறதா

    ReplyDelete