FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 26, 2017

செவித்திறன் பாதித்த ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பு

24.01.2017
செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செவித்திறன் குறைபாடு 60 டெசிபல் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்படுகிறது. இதுவரை அனைத்து ஊழியர்களுக்கும் பயணப் படியாக மாதந்தோறும் ரூ.1,600 வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சுகாதாரத்துறையின் பரிந்துரையின்பேரில் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படியாக மாதந்தோறும் ரூ.3,200 வழங்கப்படும்.

முழுமையாக காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என அந்த அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. தமிழ்நாடு அரசு செவித்திறன் 69% பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை ஏதேனும் அரசு ஆனை இருக்கிறதா

    ReplyDelete