FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, January 11, 2017

நம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம் அசத்தும் மாற்றுத்திறனாளி DEAF மாணவர்

07.01.2017
நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். அதுவும் ஒரு மாற்றுத்திறனாளி மாணவன் கல்லுாரியில் உயர்கல்வி கற்று தொடர்ந்து சாதனை படைப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் இயலாத காரியம்.
இறைவனின் படைப்பில் தான் எத்தனை வகை படைப்புக்கள் உள்ளன. அதுவும் வாய்பேச முடியாமலும், காதுகேட்காத சூழ்நிலையிலும் மனம் தளராமல் வாழ்க்கையில் உயர்ந்து சாதித்துக்காட்டுவோம் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தான் எத்தனை பேர்.

வறுமை எங்களை வாட்டினாலும் பரவாயில்லை; நாம் பெற்ற குழந்தைகளாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று உறுதியான எண்ணத்துடனும், மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர, ஒரே வழி உயர்கல்வி கற்க வைப்பது தான் உறுதியான முடிவோடு, பெற்ற மகனை கல்லுாரியில் சேர்த்து அழகு பார்க்கும் பெற்றோரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
கோவை மாவட்டம் வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கல்லுாரி நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் பழநியை சேர்ந்த காதுகேளாத, வாய் பேச முடியாத மாணவனை சேர்க்க, பல்வேறு கல்லுாரிகள் முன்வராத நிலையில், வால்பாறை அரசுக்கலைக்கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி உத்தரவின் பேரில், மாற்றுத்திறனாளி மாணவனை கல்லுாரியில் சேர்க்க வைத்து, அந்த மாணவனுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் பாடம் சொல்லி தருகின்றனர். 

பழநியை சேர்ந்த மாணவன் அருண்பிரகாஷ், வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டேன்டீ) எஸ்டேட்டில் பணிபுரியும் பெரியப்பா அழகிரியின் வீட்டில் இருந்தபடி வால்பாறையில் உள்ள கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இது குறித்து கல்லுாரி வணிகவியல்துறை துறைத்தலைவரும், பேராசிரியருமான பெரியசாமி கூறியதாவது: இம்மாணவரை பல்வேறு கல்லுாரியில் சேர்க்க மறுத்தாலும், இக்கல்லுாரி முதல்வர் அவரை அரவணைத்து, அவருக்கு தேவையான அனைத்து அரசு உதவிகளையும் பெற்று இலவசமாகவே கல்வி கற்றுத்தருகிறோம். கல்லுாரியில் வகுப்பு நடைபெறும் போது சகமாணவர்களுடன் அமர்ந்திருப்பார். வகுப்பு முடிந்த பின் இந்த மாணவனுக்கு மட்டும் தனியாக வகுப்புக்கள் நடத்தப்படும்.

அப்போது செய்கை முறையிலும், எழுத்து மூலமாகவும் விளக்கி பாடங்களை கற்றுத்தருகிறோம். எந்த ஒரு பாடம் நடத்தினாலும் அதை எளிதில் புரிந்து கொள்ளும் அற்புதத்திறன் படைத்த மாணவன் என்பதால், அவருக்கு தொடர்ந்து அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தனியாக பாடம் நடத்தி வருகின்றனர். 

சிறப்பு கவனம் எடுத்து மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பாடம் நடத்துவது எங்களுக்கும் ஒரு பெருமையாக உள்ளது. படிப்பை தவிர செஸ் விளையாட்டுப்போட்டியிலும் இந்த மாணவன் மாநில அளவில் வெற்றி பெற்று பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, பெரியசாமி கூறினார்.
மாணவன் அருண்பிரகாஷ் கூறுகையில், ''ஏழையாக பிறந்து, மாற்றுத்திறனாளியாக வளர்ந்த என்னை, உயர்கல்வி கற்க வைக்க அரும்பாடுபட்டுவரும் இக்கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் அனைவரையும் வாழ்நாளில் மறக்க மாட்டேன், இதே கல்லுாரியில் எம்.காம்.,படித்து விட்டு என்னை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது லட்சியம்,'' என்றார்.

மாற்றுத்திறனாளி மாணவனின் லட்சியம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment