FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, January 14, 2017

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்குனர் சசிஆனந்த் தகவல்

13.01.2017, ஸ்ரீவில்லிபுத்தூர்,
பொங்கல் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேந்தர் ஸ்ரீதரன், இயக்குனர்கள் அறிவழகி, சசிஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், துணை வேந்தர் சரவண சங்கர், பதிவாளர் வாசுதேவன், டீன் ஆறுமுகம், மாணவர் சேர்க்கை இயக்குனர் லிங்கசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடந்து இயக்குனர் சசிஆனந்த் கூறியதாவது;–

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மிகுந்த படிப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு கடந்த ஆண்டு 1,450 பேர் வேலை வாய்ப்பு பெற்று ரூ.4.5 லட்சம் வருட ஊதியத்தில் பலர் பல்வேறு நிறுவானங்களில் வேலையில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களை வேகம், மித வேகம், குறை வேகம், என பகுத்து வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் பி.டெக். பிரத்யேகத்துறையில் சேர்ந்து மதுரை, சென்னை, பெங்களூரு கம்பெனிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் பார்க்க சென்ற போது தங்களுக்கு மறு வாழ்வு கிடைத்ததற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

சலுகைநுழைவு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெறுவோருக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது. முதல் பட்டதாரி மற்றும் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தோருக்கும் சலுகை வழங்கப்படுகிறது. சுற்றுப்புற கிராம மாணவர்களை படிக்க வைத்து ஜெர்மனி, ஜப்பான் நாடுவரை வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சேப்டர்ஸ் மூலமும் தொடர்பு கொண்டு உதவி புரிகிறார்கள்.

இந்தியாவில் எங்கு இருந்து வந்து சேர்ந்து படித்தாலும் கல்விக்கடன் வழங்க பல வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வங்கிகள் தம் சேவையை பல்கலைக்கழக வளாகத்திலேயே தொடர்ந்து இயக்குவதால் பண பரிவர்த்தனை, கல்விக்கட்டண சலுகை இவற்றில் முதல் நிலையில் உள்ளது. இதனால் அந்தமான், நேபாளம், பூடான் மாணவர்கள் உள்பட இந்தியாவில் அனைத்து மாநில மாணவர்களும் அவரவர்கள் கலாச்சார பண்போடு படிப்பதற்கு உகந்த வகையில் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment