FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, January 14, 2017

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்குனர் சசிஆனந்த் தகவல்

13.01.2017, ஸ்ரீவில்லிபுத்தூர்,
பொங்கல் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேந்தர் ஸ்ரீதரன், இயக்குனர்கள் அறிவழகி, சசிஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், துணை வேந்தர் சரவண சங்கர், பதிவாளர் வாசுதேவன், டீன் ஆறுமுகம், மாணவர் சேர்க்கை இயக்குனர் லிங்கசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடந்து இயக்குனர் சசிஆனந்த் கூறியதாவது;–

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மிகுந்த படிப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு கடந்த ஆண்டு 1,450 பேர் வேலை வாய்ப்பு பெற்று ரூ.4.5 லட்சம் வருட ஊதியத்தில் பலர் பல்வேறு நிறுவானங்களில் வேலையில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களை வேகம், மித வேகம், குறை வேகம், என பகுத்து வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் பி.டெக். பிரத்யேகத்துறையில் சேர்ந்து மதுரை, சென்னை, பெங்களூரு கம்பெனிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் பார்க்க சென்ற போது தங்களுக்கு மறு வாழ்வு கிடைத்ததற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

சலுகைநுழைவு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெறுவோருக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது. முதல் பட்டதாரி மற்றும் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தோருக்கும் சலுகை வழங்கப்படுகிறது. சுற்றுப்புற கிராம மாணவர்களை படிக்க வைத்து ஜெர்மனி, ஜப்பான் நாடுவரை வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சேப்டர்ஸ் மூலமும் தொடர்பு கொண்டு உதவி புரிகிறார்கள்.

இந்தியாவில் எங்கு இருந்து வந்து சேர்ந்து படித்தாலும் கல்விக்கடன் வழங்க பல வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வங்கிகள் தம் சேவையை பல்கலைக்கழக வளாகத்திலேயே தொடர்ந்து இயக்குவதால் பண பரிவர்த்தனை, கல்விக்கட்டண சலுகை இவற்றில் முதல் நிலையில் உள்ளது. இதனால் அந்தமான், நேபாளம், பூடான் மாணவர்கள் உள்பட இந்தியாவில் அனைத்து மாநில மாணவர்களும் அவரவர்கள் கலாச்சார பண்போடு படிப்பதற்கு உகந்த வகையில் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment