FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 14, 2017

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்குனர் சசிஆனந்த் தகவல்

13.01.2017, ஸ்ரீவில்லிபுத்தூர்,
பொங்கல் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேந்தர் ஸ்ரீதரன், இயக்குனர்கள் அறிவழகி, சசிஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், துணை வேந்தர் சரவண சங்கர், பதிவாளர் வாசுதேவன், டீன் ஆறுமுகம், மாணவர் சேர்க்கை இயக்குனர் லிங்கசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடந்து இயக்குனர் சசிஆனந்த் கூறியதாவது;–

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மிகுந்த படிப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு கடந்த ஆண்டு 1,450 பேர் வேலை வாய்ப்பு பெற்று ரூ.4.5 லட்சம் வருட ஊதியத்தில் பலர் பல்வேறு நிறுவானங்களில் வேலையில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களை வேகம், மித வேகம், குறை வேகம், என பகுத்து வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் பி.டெக். பிரத்யேகத்துறையில் சேர்ந்து மதுரை, சென்னை, பெங்களூரு கம்பெனிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் பார்க்க சென்ற போது தங்களுக்கு மறு வாழ்வு கிடைத்ததற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

சலுகைநுழைவு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெறுவோருக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது. முதல் பட்டதாரி மற்றும் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தோருக்கும் சலுகை வழங்கப்படுகிறது. சுற்றுப்புற கிராம மாணவர்களை படிக்க வைத்து ஜெர்மனி, ஜப்பான் நாடுவரை வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சேப்டர்ஸ் மூலமும் தொடர்பு கொண்டு உதவி புரிகிறார்கள்.

இந்தியாவில் எங்கு இருந்து வந்து சேர்ந்து படித்தாலும் கல்விக்கடன் வழங்க பல வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வங்கிகள் தம் சேவையை பல்கலைக்கழக வளாகத்திலேயே தொடர்ந்து இயக்குவதால் பண பரிவர்த்தனை, கல்விக்கட்டண சலுகை இவற்றில் முதல் நிலையில் உள்ளது. இதனால் அந்தமான், நேபாளம், பூடான் மாணவர்கள் உள்பட இந்தியாவில் அனைத்து மாநில மாணவர்களும் அவரவர்கள் கலாச்சார பண்போடு படிப்பதற்கு உகந்த வகையில் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment