FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, January 14, 2017

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்குனர் சசிஆனந்த் தகவல்

13.01.2017, ஸ்ரீவில்லிபுத்தூர்,
பொங்கல் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேந்தர் ஸ்ரீதரன், இயக்குனர்கள் அறிவழகி, சசிஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், துணை வேந்தர் சரவண சங்கர், பதிவாளர் வாசுதேவன், டீன் ஆறுமுகம், மாணவர் சேர்க்கை இயக்குனர் லிங்கசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடந்து இயக்குனர் சசிஆனந்த் கூறியதாவது;–

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மிகுந்த படிப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு கடந்த ஆண்டு 1,450 பேர் வேலை வாய்ப்பு பெற்று ரூ.4.5 லட்சம் வருட ஊதியத்தில் பலர் பல்வேறு நிறுவானங்களில் வேலையில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களை வேகம், மித வேகம், குறை வேகம், என பகுத்து வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் பி.டெக். பிரத்யேகத்துறையில் சேர்ந்து மதுரை, சென்னை, பெங்களூரு கம்பெனிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் பார்க்க சென்ற போது தங்களுக்கு மறு வாழ்வு கிடைத்ததற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

சலுகைநுழைவு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெறுவோருக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது. முதல் பட்டதாரி மற்றும் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தோருக்கும் சலுகை வழங்கப்படுகிறது. சுற்றுப்புற கிராம மாணவர்களை படிக்க வைத்து ஜெர்மனி, ஜப்பான் நாடுவரை வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சேப்டர்ஸ் மூலமும் தொடர்பு கொண்டு உதவி புரிகிறார்கள்.

இந்தியாவில் எங்கு இருந்து வந்து சேர்ந்து படித்தாலும் கல்விக்கடன் வழங்க பல வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வங்கிகள் தம் சேவையை பல்கலைக்கழக வளாகத்திலேயே தொடர்ந்து இயக்குவதால் பண பரிவர்த்தனை, கல்விக்கட்டண சலுகை இவற்றில் முதல் நிலையில் உள்ளது. இதனால் அந்தமான், நேபாளம், பூடான் மாணவர்கள் உள்பட இந்தியாவில் அனைத்து மாநில மாணவர்களும் அவரவர்கள் கலாச்சார பண்போடு படிப்பதற்கு உகந்த வகையில் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment