FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 10, 2017

காது கேளாதோர் மேல்நிலை பள்ளியில் படித்துவந்த மாணவன் தற்கொலை!

10.01.2017
விருத்தாசலம் அருகே கோணான் குப்பம் காதுகேளாதோர் மேல்நிலை பள்ளியில் படித்துவந்த 8ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கோணான் குப்பம் கிராமத்தில் காது கேளாதோர் மற்றும் மனநிலை குன்றியோர் மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில், அங்கேயே தங்கி 8-ம் வகுப்பு படித்துவந்த அந்தோணி ஜோசப் என்கிற மாணவன், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அவருடைய அறைக்கு படுக்க சென்றுள்ளார்.

ஆனால், இன்று அறையை விட்டு அவன் வெளியே வராததால், விடுதி காப்பாளர் சென்று பார்த்துள்ளார்.

அப்போது அந்தோணிராஜ் தூக்கில் தொங்கிக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து மங்கலம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார், மாணவனின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment