FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, January 14, 2017

மாற்றுத்திறனாளிகள்: வாழ்க்கைத் துணை!

மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் ஏற்படும் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
இது குறித்து கல்யாணி கோனா விளக்குகிறார்:
"எட்டு லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாழ்கிறார்கள். இவர்களில் ஐந்து சதவீதத்தினருக்குத்தான் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதர 95 சதவீதத்தினர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று யாரும் கவலைப்படவில்லை.. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் இல்லை.

சமூகம் அவர்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பதில்லை. உரிமைகளைத் தருவதில்லை. தர மறுக்கிறது என்பதுதான் சரி.... மாற்றுத்திறனாளிகள் தங்களின் உடல் குறைகளை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது. பிறந்துவிட்டதினால் வாழ்ந்தாக வேண்டும் என்ற காரணத்திற்காக உரிமைகளுக்காக சமூகத்துடன் போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் திருமணம் பற்றி அநேக மாற்றுத்திறனாளிகளுக்கு நினைத்துப் பார்க்கவே நேரம் இருப்பதில்லை.

பதினேழு வயதில் பெற்றோர்களிடம் பண உதவி பெறுவதை நிறுத்திவிட்டேன். பிரேசிலில் வாழ்ந்திருக்கிறேன். அங்கே தனியாகப் போனேன். பிரேசிலில் ஆங்கிலம் கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும். அங்கே தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள் யாரும் கிடையாது. ஸ்பானிஷ் அரசாங்க மொழி. தெரியாத இடம்... தெரியாத மொழி.. தெரியாத நபர்கள்.. என்னால் திரு திருவென்று விழிக்க மட்டுமே முடிந்தது .

நான் ஆங்கிலத்தில் கேட்பதை - சொல்வதைக் கேட்ட பிரேசில் நாட்டவர்களும் பதிலுக்கு விழித்தார்கள். எனக்குத் தெரிந்த ஆங்கிலம் எனக்குக் கை கொடுக்கவில்லை அவர்கள் மொழி எனக்குத் தெரியாதது ஒரு இயலாமைதானே.. எனது இயலாமைகளினால் நானும் ஒரு மாற்றுத் திறனாளியானேன். அந்த நாட்டு மக்களிடம் பேச வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல், ஸ்பானிஷ் மொழி படித்தேன். கொலம்பியா போனேன். அங்கும் அதே கதைதான். பிறகு கம்போடியா... எல்லா இடத்திலும் என்னை ஒரு மாற்றுத்திறனாளியாகவே உணர்ந்தேன்.. அந்த உணர்வுதான் என்னை இந்தப் பாதையில் பயணிக்கத் தூண்டியிருக்க வேண்டும். நான் குஜராத்தைச் சேர்ந்தவள் என்றாலும், படித்தது மும்பையில், வாழுவது டில்லியில்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாக வாழ்க்கைத்துணையைத் தேடித்தரும் திருமண சேவை மையம் இல்லை என்பது தெரியவந்தது. இது இந்தியாவில் மட்டும் உள்ள நிலைமை அல்ல. வெளிநாடுகளிலும் இதே நிலைமைதான். அதனால் இந்தியர்களை இந்த விஷயத்தில் குறை சொல்ல முடியாது. மாற்றுத்திறனாளிகள் அவர்கள் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்தால் தனியாக இருந்து கொள்ளட்டும். ஜோடியை தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதற்காகத் தனியாக, தனிமையாக யாரும் வாழவேண்டாம். தனியாக வாழவும் விடக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். இந்த முயற்சியில் நாமே முதன் முதலாக இறங்கினால் என்ன என்று தோன்றியது. அந்த முடிவில் உருவானதுதான் "வாண்ட்டட் அம்பரல்லா' (Wanted Umbrella).

ஆன்லைன் சேவை மட்டுமே விரைவாக செயல்படும் என்பதால் ஆன்லைன் சேவை தொடங்க முடிவு செய்தேன். ஆனால் ஆன்லைன் சேவை தொடங்க சுமார் ஐந்து லட்சம் செலவு செய்யவேண்டும். பணத்திற்கு எங்கு போவது. இந்தப் பொருளாதாரத் தேவையை மக்களிடம் முன் வைத்தேன். சுமார் ஆறு லட்சம் திரட்ட முடிந்தது. அதைவிட முக்கியமானது பலர் தந்த யோசனைகள் அறிவுரைகள்.. அவை எனது முயற்சிக்கு புதிய பாதை போட்டுத் தந்தன. அப்படித் தொடங்கப்பட்டதுதான் இன்க்லவ் (Inclov) என்ற நிறுவனம்.

இன்க்லவ், உலகில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட முதல் செயலி. பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், ஸ்க்ரீன் ரீடர், டாக்பேக் வசதிளை உருவாக்கியிருக்கிறோம். இது பாதுகாப்பான செயலி ஆகும். இதைத் தவறாகப் பயன்படுத்த முடியாது. கூடிய சீக்கிரம், வீடியோ அழைப்பு வசதியையும் உருவாக்க இருக்கிறோம். இதனால், கேட்கும் சக்தி இல்லாதவர்கள், பேச இயலாதவர்கள் சைகை மூலம் பேசிப் புரிந்து கொள்ள முடியும். இப்போதைய செயலி ஆண்ட்ராய்ட் தளத்தில் இயங்குகிறது. இந்த ஆன்லைன் வசதிக்கு அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளது. இன்க்லவ்வை 2016 ஜனவரி மாதம் 21-ம் நாள் தொடங்கினேன். இதுவரை ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்து முன்னூறு மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். இதுவே ஒரு சாதனைதான்.

இன்க்லவ் சேவை தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள் அனிஷா - இம்ரான் இந்த சேவையில் பதிவு செய்து, பரஸ்பரம் அறிமுகமாகி பிடித்துப் போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் . முப்பது வயதாகும் அனிஷா பானு முல்தானி ஆறு ஆண்டுகளாக தனக்கு ஒரு துணை கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தார். அனிஷா போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலி உதவியால் வலம் வருபவர்.

அனிஷா சென்ற ஆண்டில் மிஸ் வீல்சேர் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர். சூரத்தைச் சேர்ந்த அனிஷா இன்க்லவ் சேவை மூலமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கரானா இம்ரான் என்பவருடன் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்ள பரஸ்பரம் ஒத்துக் கொண்டுள்ளனர். இன்னொருவர் சாகர். பார்வையற்றவர். எந்தக் குறையும் இல்லாத நதியா என்பவரின் அறிமுகம் இன்க்லவ் சேவை மூலம் கிடைக்க ... இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

வணிக ரீதியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கை அமைத்துத் தரும் சேவையிலும் இன்க்லவ் வெற்றி பெற்றுள்ளது. வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த சேவையை சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடைய, தொடர்ந்து உழைப்பேன்'' என்கிறார் கல்யாணி.

No comments:

Post a Comment