FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 26, 2017

காது கேளாத குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: கொடைக்கானலில் 16 பேர் தேர்வு

23.01.2017
கொடைக்கானல் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பாசம் டிரஸ்ட் சார்பில், 6 வயதுக்குள்பட்ட காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ளான்ட் எனப்படும் காது கேட்கச் செய்யும் கருவி பொருத்தி இலவச சிகிச்சை அளிக்க சனிக்கிழமை 16 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் எஸ்தர் ஆப்ரகாம் வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கொடைக்கானல், மதுரை, பெரியகுளம், நிலக்கோட்டை, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாமை, கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், சீயோன் பள்ளித் தாளாளருமான கே.சி. குரியன் ஆப்ரகாம் தொடக்கி வைத்தார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்டவர்களுக்கு, மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனையின் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலைமையில், மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். முகாமில் பங்கேற்றவர்களில் 16 பேர் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, முகாமிலேயே அவர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் கூறியது: தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான இலவச காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காது கேளாதவர்கள் அதிகம். இதற்குக் காரணம், உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றார்.


No comments:

Post a Comment