FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 26, 2017

காது கேளாத குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: கொடைக்கானலில் 16 பேர் தேர்வு

23.01.2017
கொடைக்கானல் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பாசம் டிரஸ்ட் சார்பில், 6 வயதுக்குள்பட்ட காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ளான்ட் எனப்படும் காது கேட்கச் செய்யும் கருவி பொருத்தி இலவச சிகிச்சை அளிக்க சனிக்கிழமை 16 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் எஸ்தர் ஆப்ரகாம் வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கொடைக்கானல், மதுரை, பெரியகுளம், நிலக்கோட்டை, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாமை, கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், சீயோன் பள்ளித் தாளாளருமான கே.சி. குரியன் ஆப்ரகாம் தொடக்கி வைத்தார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்டவர்களுக்கு, மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனையின் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலைமையில், மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். முகாமில் பங்கேற்றவர்களில் 16 பேர் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, முகாமிலேயே அவர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் கூறியது: தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான இலவச காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காது கேளாதவர்கள் அதிகம். இதற்குக் காரணம், உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றார்.


No comments:

Post a Comment