FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, January 26, 2017

காது கேளாத குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: கொடைக்கானலில் 16 பேர் தேர்வு

23.01.2017
கொடைக்கானல் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பாசம் டிரஸ்ட் சார்பில், 6 வயதுக்குள்பட்ட காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ளான்ட் எனப்படும் காது கேட்கச் செய்யும் கருவி பொருத்தி இலவச சிகிச்சை அளிக்க சனிக்கிழமை 16 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் எஸ்தர் ஆப்ரகாம் வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கொடைக்கானல், மதுரை, பெரியகுளம், நிலக்கோட்டை, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாமை, கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், சீயோன் பள்ளித் தாளாளருமான கே.சி. குரியன் ஆப்ரகாம் தொடக்கி வைத்தார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்டவர்களுக்கு, மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனையின் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலைமையில், மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். முகாமில் பங்கேற்றவர்களில் 16 பேர் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, முகாமிலேயே அவர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் கூறியது: தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான இலவச காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காது கேளாதவர்கள் அதிகம். இதற்குக் காரணம், உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றார்.


No comments:

Post a Comment