FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, January 26, 2017

காது கேளாத குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: கொடைக்கானலில் 16 பேர் தேர்வு

23.01.2017
கொடைக்கானல் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பாசம் டிரஸ்ட் சார்பில், 6 வயதுக்குள்பட்ட காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ளான்ட் எனப்படும் காது கேட்கச் செய்யும் கருவி பொருத்தி இலவச சிகிச்சை அளிக்க சனிக்கிழமை 16 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் எஸ்தர் ஆப்ரகாம் வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கொடைக்கானல், மதுரை, பெரியகுளம், நிலக்கோட்டை, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த முகாமை, கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், சீயோன் பள்ளித் தாளாளருமான கே.சி. குரியன் ஆப்ரகாம் தொடக்கி வைத்தார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்டவர்களுக்கு, மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனையின் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலைமையில், மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். முகாமில் பங்கேற்றவர்களில் 16 பேர் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, முகாமிலேயே அவர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள், தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மருத்துவமனை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் கூறியது: தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான இலவச காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காது கேளாதவர்கள் அதிகம். இதற்குக் காரணம், உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றார்.


No comments:

Post a Comment