FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, February 22, 2017

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு 1,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல்

21.02.2017, எழும்பூர்: மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில், 1,500 வீரர்,

வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான, 16வது மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகள் நடந்தன. அந்த போட்டிகள், எழும்பூர் நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கபடி, சக்கர நாற்காலி கூடைபந்து என, 48

வகையான போட்டிகள் நடந்தன. அதில், 1 முதல், 12 வயது வரை ஒரு பிரிவாகவும், 12 முதல், 18 வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோர், ஒரு பிரிவாகவும் பங்கேற்றனர்.

பார்வையற்றோருக்கு கையுந்து பந்து போட்டி நடந்தது. செவித்திறன் குறைப்பாடு உடையோர், தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் உள்ளிட்டோரும் போட்டியில் பங்கேற்றனர்.

அதில், மாவட்டந்தோறும் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், 1,500 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற, 400 வீரர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment