FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, February 22, 2017

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு 1,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல்

21.02.2017, எழும்பூர்: மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில், 1,500 வீரர்,

வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான, 16வது மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகள் நடந்தன. அந்த போட்டிகள், எழும்பூர் நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கபடி, சக்கர நாற்காலி கூடைபந்து என, 48

வகையான போட்டிகள் நடந்தன. அதில், 1 முதல், 12 வயது வரை ஒரு பிரிவாகவும், 12 முதல், 18 வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோர், ஒரு பிரிவாகவும் பங்கேற்றனர்.

பார்வையற்றோருக்கு கையுந்து பந்து போட்டி நடந்தது. செவித்திறன் குறைப்பாடு உடையோர், தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் உள்ளிட்டோரும் போட்டியில் பங்கேற்றனர்.

அதில், மாவட்டந்தோறும் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், 1,500 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற, 400 வீரர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment