FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, February 20, 2017

கரவோசையை தன்வசப்படுத்திய காதுகேளாத மாணவர்கள்!

17.02.2017 கோவை:
கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் (மாவட்டம், 324 - பி5) சார்பில், நேற்று நடந்த மாவட்ட அளவிலான காதுகேளாதோர் விளையாட்டு போட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த போட்டியில், அரசு, அரசு உதவிபெறும் நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் கல்லுாரியை சேர்ந்த, 30 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 50 மீ., 100, 200, 400, 800, 4*100 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

ஜூனியர் பிரிவில் ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், ராஜவீதி டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் சாதிக் அலி முதலிடமும், காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக் இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் விக்னேஸ் மூன்றாம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.அதேபோல், ஜூனியர் பிரிவு பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், காரமடை அரசுப் பள்ளி மாணவி கோபிகா முதலிடமும், மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளி மாணவி அப்ரஸ் சாலிகா இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவி சவுபர்னிகா மூன்றாமிடமும் பிடித்தனர்.
சூப்பர் சீனியர் பிரிவு ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், சங்கரா கல்லுாரி மாணவர்கள் மார்சல், திலீபன், பாஸ்டின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில் சங்கரா கல்லுாரி மாணவியர், தனலட்சுமி, சேன்பியா, பிரியங்கா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடந்தது. முன்னதாக, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் போட்டிகளை துவக்கி வைத்தார். 

கோவை செசயர் ஹோம்ஸ் செயலாளர் தனலட்சுமி, காதுகேளாதோர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் வெங்கடேசன், பொது செயலாளர் சுந்தரராஜன், போட்டி நடுவர்களாக ஜி.சி.டி., மாணவர்கள் சக்திவேல், ராஜேஸ்குமார், சுரேந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment