FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, February 20, 2017

கரவோசையை தன்வசப்படுத்திய காதுகேளாத மாணவர்கள்!

17.02.2017 கோவை:
கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் (மாவட்டம், 324 - பி5) சார்பில், நேற்று நடந்த மாவட்ட அளவிலான காதுகேளாதோர் விளையாட்டு போட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த போட்டியில், அரசு, அரசு உதவிபெறும் நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் கல்லுாரியை சேர்ந்த, 30 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 50 மீ., 100, 200, 400, 800, 4*100 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

ஜூனியர் பிரிவில் ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், ராஜவீதி டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் சாதிக் அலி முதலிடமும், காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக் இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் விக்னேஸ் மூன்றாம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.அதேபோல், ஜூனியர் பிரிவு பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், காரமடை அரசுப் பள்ளி மாணவி கோபிகா முதலிடமும், மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளி மாணவி அப்ரஸ் சாலிகா இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவி சவுபர்னிகா மூன்றாமிடமும் பிடித்தனர்.
சூப்பர் சீனியர் பிரிவு ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், சங்கரா கல்லுாரி மாணவர்கள் மார்சல், திலீபன், பாஸ்டின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில் சங்கரா கல்லுாரி மாணவியர், தனலட்சுமி, சேன்பியா, பிரியங்கா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடந்தது. முன்னதாக, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் போட்டிகளை துவக்கி வைத்தார். 

கோவை செசயர் ஹோம்ஸ் செயலாளர் தனலட்சுமி, காதுகேளாதோர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் வெங்கடேசன், பொது செயலாளர் சுந்தரராஜன், போட்டி நடுவர்களாக ஜி.சி.டி., மாணவர்கள் சக்திவேல், ராஜேஸ்குமார், சுரேந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment