FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 20, 2017

கரவோசையை தன்வசப்படுத்திய காதுகேளாத மாணவர்கள்!

17.02.2017 கோவை:
கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் (மாவட்டம், 324 - பி5) சார்பில், நேற்று நடந்த மாவட்ட அளவிலான காதுகேளாதோர் விளையாட்டு போட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த போட்டியில், அரசு, அரசு உதவிபெறும் நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் கல்லுாரியை சேர்ந்த, 30 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 50 மீ., 100, 200, 400, 800, 4*100 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

ஜூனியர் பிரிவில் ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், ராஜவீதி டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் சாதிக் அலி முதலிடமும், காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக் இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் விக்னேஸ் மூன்றாம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.அதேபோல், ஜூனியர் பிரிவு பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், காரமடை அரசுப் பள்ளி மாணவி கோபிகா முதலிடமும், மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளி மாணவி அப்ரஸ் சாலிகா இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவி சவுபர்னிகா மூன்றாமிடமும் பிடித்தனர்.
சூப்பர் சீனியர் பிரிவு ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், சங்கரா கல்லுாரி மாணவர்கள் மார்சல், திலீபன், பாஸ்டின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில் சங்கரா கல்லுாரி மாணவியர், தனலட்சுமி, சேன்பியா, பிரியங்கா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடந்தது. முன்னதாக, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் போட்டிகளை துவக்கி வைத்தார். 

கோவை செசயர் ஹோம்ஸ் செயலாளர் தனலட்சுமி, காதுகேளாதோர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் வெங்கடேசன், பொது செயலாளர் சுந்தரராஜன், போட்டி நடுவர்களாக ஜி.சி.டி., மாணவர்கள் சக்திவேல், ராஜேஸ்குமார், சுரேந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment