FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, February 28, 2017

உயிரிழந்த காதுகேளாத பெண்ணின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்த சோகச் சம்பவம்


பெங்களூரு: பெங்களூரு அருகே ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த காதுகேளாத பெண்ணின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரில் இருந்து சுமார் 150கி.மீ தொலைவில், மதுகிரி பகுதியில் உள்ள வீரபுராவில் வசித்து வரும் ரத்னம்மா(20), கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வீரபுராவில் இருந்து 6 கி.மீ தொலைவிற்கு ரத்னம்மாவை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கொடிகெனஹள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அவரது தந்தை திம்மாப்பா அழைத்துச் சென்றுள்ளார்.

சாதாரண பூ வியாபாரியாக உள்ள திம்மப்பா மருத்துவ செலவிற்கு வெறும் ரூ.150 மட்டுமே வைத்துள்ளார். சனிக்கிழமை காலை கடுமையான காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்த ரத்னம்மாவுக்கு கொடிகெனஹள்ளி சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், அன்று மாலை தன்னால் முடியவில்லை என்று ரத்னம்மா கூறியதையடுத்து, அருகேயுள்ள தனியார் கிளினிக்கிற்கு திம்மப்பாவும் அவரது மகனும் கொண்டு சென்றனர். ரத்னம்மாவை பரிசோதித்த மருத்துவர் பாபு ஊசி, போட்டு மாத்திரைக் கொடுத்து உடனடியாக மதுகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் அவர் ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்துத் தரவில்லை.

இந்நிலையில், இரவு முழுவதும் தூங்க முடியாமல் சிரமப்பட்ட ரத்னம்மாவை மதுகிரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க அவசர ஆம்புலன்ஸ் உதவியை திம்மப்பா நாடியுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் மீண்டும் ரத்னம்மாவை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு 6.கி.மீ பயணம் செய்து சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு செல்வதற்குள் ரத்னம்மா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து சுகாதார மையத்தில் இருந்து ரத்னம்மாவின் உடலை வீட்டிற்குக் கொண்டு செல்ல திம்மப்பா மீண்டும் ஆம்புலன்ஸ் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்போது, இறந்த பிணத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை தரப்படமாட்டாது என்றுக் கூறி சுகாதார மைய ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 6.கி.மீ வரை இறந்துபோன தனது மகளின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ஆம்புலன்ஸ் தேவைக்காக எவ்வித அழைப்பும் வரப்படவில்லை. எனினும், தனது ஊழியர்களிடம் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார். மேலும், திம்மாப்பா தனியார் மருத்துவரை சென்று அணுகியது மிகப் பெரிய குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரது மனைவி உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்ட நிலையில், மனைவியின் உடலை சுமார் 12 கி.மீ., வரை தனது தோளில் சுமந்து கொண்டு சென்றார். இந்த கட்சிகள் ஊடகங்களில் வெளியனாதையடுத்து, அம்மாநில முதல்வரின் உத்தரவுப்படி இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment