FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, February 28, 2017

உயிரிழந்த காதுகேளாத பெண்ணின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்த சோகச் சம்பவம்


பெங்களூரு: பெங்களூரு அருகே ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த காதுகேளாத பெண்ணின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரில் இருந்து சுமார் 150கி.மீ தொலைவில், மதுகிரி பகுதியில் உள்ள வீரபுராவில் வசித்து வரும் ரத்னம்மா(20), கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வீரபுராவில் இருந்து 6 கி.மீ தொலைவிற்கு ரத்னம்மாவை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கொடிகெனஹள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அவரது தந்தை திம்மாப்பா அழைத்துச் சென்றுள்ளார்.

சாதாரண பூ வியாபாரியாக உள்ள திம்மப்பா மருத்துவ செலவிற்கு வெறும் ரூ.150 மட்டுமே வைத்துள்ளார். சனிக்கிழமை காலை கடுமையான காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்த ரத்னம்மாவுக்கு கொடிகெனஹள்ளி சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், அன்று மாலை தன்னால் முடியவில்லை என்று ரத்னம்மா கூறியதையடுத்து, அருகேயுள்ள தனியார் கிளினிக்கிற்கு திம்மப்பாவும் அவரது மகனும் கொண்டு சென்றனர். ரத்னம்மாவை பரிசோதித்த மருத்துவர் பாபு ஊசி, போட்டு மாத்திரைக் கொடுத்து உடனடியாக மதுகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் அவர் ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்துத் தரவில்லை.

இந்நிலையில், இரவு முழுவதும் தூங்க முடியாமல் சிரமப்பட்ட ரத்னம்மாவை மதுகிரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க அவசர ஆம்புலன்ஸ் உதவியை திம்மப்பா நாடியுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் மீண்டும் ரத்னம்மாவை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு 6.கி.மீ பயணம் செய்து சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு செல்வதற்குள் ரத்னம்மா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து சுகாதார மையத்தில் இருந்து ரத்னம்மாவின் உடலை வீட்டிற்குக் கொண்டு செல்ல திம்மப்பா மீண்டும் ஆம்புலன்ஸ் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்போது, இறந்த பிணத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை தரப்படமாட்டாது என்றுக் கூறி சுகாதார மைய ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 6.கி.மீ வரை இறந்துபோன தனது மகளின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ஆம்புலன்ஸ் தேவைக்காக எவ்வித அழைப்பும் வரப்படவில்லை. எனினும், தனது ஊழியர்களிடம் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார். மேலும், திம்மாப்பா தனியார் மருத்துவரை சென்று அணுகியது மிகப் பெரிய குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரது மனைவி உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்ட நிலையில், மனைவியின் உடலை சுமார் 12 கி.மீ., வரை தனது தோளில் சுமந்து கொண்டு சென்றார். இந்த கட்சிகள் ஊடகங்களில் வெளியனாதையடுத்து, அம்மாநில முதல்வரின் உத்தரவுப்படி இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment