FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, February 28, 2017

உயிரிழந்த காதுகேளாத பெண்ணின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்த சோகச் சம்பவம்


பெங்களூரு: பெங்களூரு அருகே ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த காதுகேளாத பெண்ணின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரில் இருந்து சுமார் 150கி.மீ தொலைவில், மதுகிரி பகுதியில் உள்ள வீரபுராவில் வசித்து வரும் ரத்னம்மா(20), கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வீரபுராவில் இருந்து 6 கி.மீ தொலைவிற்கு ரத்னம்மாவை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கொடிகெனஹள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அவரது தந்தை திம்மாப்பா அழைத்துச் சென்றுள்ளார்.

சாதாரண பூ வியாபாரியாக உள்ள திம்மப்பா மருத்துவ செலவிற்கு வெறும் ரூ.150 மட்டுமே வைத்துள்ளார். சனிக்கிழமை காலை கடுமையான காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்த ரத்னம்மாவுக்கு கொடிகெனஹள்ளி சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், அன்று மாலை தன்னால் முடியவில்லை என்று ரத்னம்மா கூறியதையடுத்து, அருகேயுள்ள தனியார் கிளினிக்கிற்கு திம்மப்பாவும் அவரது மகனும் கொண்டு சென்றனர். ரத்னம்மாவை பரிசோதித்த மருத்துவர் பாபு ஊசி, போட்டு மாத்திரைக் கொடுத்து உடனடியாக மதுகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் அவர் ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்துத் தரவில்லை.

இந்நிலையில், இரவு முழுவதும் தூங்க முடியாமல் சிரமப்பட்ட ரத்னம்மாவை மதுகிரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க அவசர ஆம்புலன்ஸ் உதவியை திம்மப்பா நாடியுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் மீண்டும் ரத்னம்மாவை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு 6.கி.மீ பயணம் செய்து சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு செல்வதற்குள் ரத்னம்மா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து சுகாதார மையத்தில் இருந்து ரத்னம்மாவின் உடலை வீட்டிற்குக் கொண்டு செல்ல திம்மப்பா மீண்டும் ஆம்புலன்ஸ் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்போது, இறந்த பிணத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை தரப்படமாட்டாது என்றுக் கூறி சுகாதார மைய ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 6.கி.மீ வரை இறந்துபோன தனது மகளின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ஆம்புலன்ஸ் தேவைக்காக எவ்வித அழைப்பும் வரப்படவில்லை. எனினும், தனது ஊழியர்களிடம் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார். மேலும், திம்மாப்பா தனியார் மருத்துவரை சென்று அணுகியது மிகப் பெரிய குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரது மனைவி உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்ட நிலையில், மனைவியின் உடலை சுமார் 12 கி.மீ., வரை தனது தோளில் சுமந்து கொண்டு சென்றார். இந்த கட்சிகள் ஊடகங்களில் வெளியனாதையடுத்து, அம்மாநில முதல்வரின் உத்தரவுப்படி இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment