FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, February 22, 2017

புலிவலத்தில் 25ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்களுக்கு அழைப்பு


21.02.2017 திருச்சி : துறையூர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் புலிவலத்தில் 25ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் துறையூர் மெயின்ரோடு புலிவலத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது. 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட இம்முகாம் நடக்கிறது. காலை 9 மணிக்கு முகாம் துவங்குகிறது.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

மண்ணச்சநல்லூர், துறையூர் ஒன்றியங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு இணை இயக்குனர் அல்லது திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்சி-1 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment