FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, February 22, 2017

புலிவலத்தில் 25ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்களுக்கு அழைப்பு


21.02.2017 திருச்சி : துறையூர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் புலிவலத்தில் 25ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் துறையூர் மெயின்ரோடு புலிவலத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது. 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட இம்முகாம் நடக்கிறது. காலை 9 மணிக்கு முகாம் துவங்குகிறது.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

மண்ணச்சநல்லூர், துறையூர் ஒன்றியங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு இணை இயக்குனர் அல்லது திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்சி-1 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment