FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 28, 2017

தேசிய அளவிலான காது கேளாதோர் விளையாட்டு போட்டிக்கு வீரர்கள் தேர்வு

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள காது கேளாதோருக்கான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கான தேர்வு திருநெல்வேலியில் 2 நாட்கள் நடைபெற்றது.


22.02.2017, திருப்பூர் :

காது கேளாதோருக்கான 21-வது தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் அடுத்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழக வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டிகள் திருநெல்வேலியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், மதுரை, ஊட்டி, கிருஷ்ணகிரி, சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இருந்து 350 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 31 வீரர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர், 1,600 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து போன்ற தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் திருப்பூரை சேர்ந்த சுதிர்ஷ் 5ஆயிரம் மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கங்கள் வென்றார்.

பெண்கள் பிரிவில் சூர்யா 800 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்திலும், ரத்தினம் குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றனர். திருப்பூர் அணி 122 புள்ளிகள் பெற்று முதலிடமும், கைப்பந்து போட்டியில் திருப்பூர் பெண்கள் அணி முதலிடமும் பெற்றுள்ளது. இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆண்களும், 15 பெண்களும் என்று மொத்தம் 27 பேர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment