FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, February 28, 2017

தேசிய அளவிலான காது கேளாதோர் விளையாட்டு போட்டிக்கு வீரர்கள் தேர்வு

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள காது கேளாதோருக்கான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கான தேர்வு திருநெல்வேலியில் 2 நாட்கள் நடைபெற்றது.


22.02.2017, திருப்பூர் :

காது கேளாதோருக்கான 21-வது தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் அடுத்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழக வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டிகள் திருநெல்வேலியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், மதுரை, ஊட்டி, கிருஷ்ணகிரி, சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இருந்து 350 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 31 வீரர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர், 1,600 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து போன்ற தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் திருப்பூரை சேர்ந்த சுதிர்ஷ் 5ஆயிரம் மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கங்கள் வென்றார்.

பெண்கள் பிரிவில் சூர்யா 800 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்திலும், ரத்தினம் குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றனர். திருப்பூர் அணி 122 புள்ளிகள் பெற்று முதலிடமும், கைப்பந்து போட்டியில் திருப்பூர் பெண்கள் அணி முதலிடமும் பெற்றுள்ளது. இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆண்களும், 15 பெண்களும் என்று மொத்தம் 27 பேர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment