FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, February 20, 2017

மும்பையில் தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்- 2017' சாதித்தது செவித்திறன் குறையுடையோர் பள்ளி

18.02.2017, சிவகாசி;
மும்பையில் நடந்த தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்-2017' போட்டியில், சிவகாசி செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களை பெற்றனர்.மும்பையில் செவித்திறன் குறையுடையோர் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான 'சைலண்ட் ஒலிம்பிக்-2017' விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள காதுகேளாதோர் பள்ளிகளில் இருந்து 500 பேர் பங்கேற்றனர். சிவகாசி செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் 34 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 13 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றுள்ளனர். 

100 மீ., மற்றும் 200 மீ.,ஓட்டத்தில் ராக்கப்பன் தங்கம் வென்றார். 11 வயது பிரிவு 100 மீ., ஓட்டத்தில் அருள்ராஜ் முதல் இடம், அபிஷேக் குமரன் மற்றும் தினேஷ் செஸ் விளை யாட்டு போட்டியில் முதல் இடம், பெண்கள் பிரிவில் லெமன் ஸ்பூன் போட்டியில் கோகிலாதேவி முதல் இடம் பெற்றனர். தனலெட்சுமி 200 மீ., நீளம் தாண்டுதல், தொடரோட்டப் போட்டிகளில் மூன்று தங்கம் வென்றார். 

தொடரோட்டத்தில் தர்ஷினி, முத்துமாரி, மாரிச்செல்வி, தனலெட்சுமி தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சாலமோன், தலைமை ஆசிரியர் பால்ராஜ் பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், பரிபூரணம் ,ஆசிரியர்கள் ஆபிரகாம், அன்புஜோதிமணி ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். விடுதி காப்பாளர் எஸ்தர் கஸ்துாரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment