FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, February 20, 2017

மும்பையில் தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்- 2017' சாதித்தது செவித்திறன் குறையுடையோர் பள்ளி

18.02.2017, சிவகாசி;
மும்பையில் நடந்த தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்-2017' போட்டியில், சிவகாசி செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களை பெற்றனர்.மும்பையில் செவித்திறன் குறையுடையோர் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான 'சைலண்ட் ஒலிம்பிக்-2017' விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள காதுகேளாதோர் பள்ளிகளில் இருந்து 500 பேர் பங்கேற்றனர். சிவகாசி செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் 34 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 13 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றுள்ளனர். 

100 மீ., மற்றும் 200 மீ.,ஓட்டத்தில் ராக்கப்பன் தங்கம் வென்றார். 11 வயது பிரிவு 100 மீ., ஓட்டத்தில் அருள்ராஜ் முதல் இடம், அபிஷேக் குமரன் மற்றும் தினேஷ் செஸ் விளை யாட்டு போட்டியில் முதல் இடம், பெண்கள் பிரிவில் லெமன் ஸ்பூன் போட்டியில் கோகிலாதேவி முதல் இடம் பெற்றனர். தனலெட்சுமி 200 மீ., நீளம் தாண்டுதல், தொடரோட்டப் போட்டிகளில் மூன்று தங்கம் வென்றார். 

தொடரோட்டத்தில் தர்ஷினி, முத்துமாரி, மாரிச்செல்வி, தனலெட்சுமி தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சாலமோன், தலைமை ஆசிரியர் பால்ராஜ் பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், பரிபூரணம் ,ஆசிரியர்கள் ஆபிரகாம், அன்புஜோதிமணி ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். விடுதி காப்பாளர் எஸ்தர் கஸ்துாரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment