FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, February 20, 2017

மும்பையில் தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்- 2017' சாதித்தது செவித்திறன் குறையுடையோர் பள்ளி

18.02.2017, சிவகாசி;
மும்பையில் நடந்த தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்-2017' போட்டியில், சிவகாசி செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களை பெற்றனர்.மும்பையில் செவித்திறன் குறையுடையோர் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான 'சைலண்ட் ஒலிம்பிக்-2017' விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள காதுகேளாதோர் பள்ளிகளில் இருந்து 500 பேர் பங்கேற்றனர். சிவகாசி செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் 34 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 13 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றுள்ளனர். 

100 மீ., மற்றும் 200 மீ.,ஓட்டத்தில் ராக்கப்பன் தங்கம் வென்றார். 11 வயது பிரிவு 100 மீ., ஓட்டத்தில் அருள்ராஜ் முதல் இடம், அபிஷேக் குமரன் மற்றும் தினேஷ் செஸ் விளை யாட்டு போட்டியில் முதல் இடம், பெண்கள் பிரிவில் லெமன் ஸ்பூன் போட்டியில் கோகிலாதேவி முதல் இடம் பெற்றனர். தனலெட்சுமி 200 மீ., நீளம் தாண்டுதல், தொடரோட்டப் போட்டிகளில் மூன்று தங்கம் வென்றார். 

தொடரோட்டத்தில் தர்ஷினி, முத்துமாரி, மாரிச்செல்வி, தனலெட்சுமி தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சாலமோன், தலைமை ஆசிரியர் பால்ராஜ் பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், பரிபூரணம் ,ஆசிரியர்கள் ஆபிரகாம், அன்புஜோதிமணி ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். விடுதி காப்பாளர் எஸ்தர் கஸ்துாரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment