FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, August 12, 2017

வேலை கேட்டு 21 ஆண்டாக அலையும் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி :கண்டு கொள்ளாத அதிகாரிகள்

09.08.2017 விருதுநகர்:வேலை கேட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு 21 ஆண்டுகளுக்கு மேலாக அலைகிறார் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி . கஜினி அரசரின் படைடெடுப்பை மிஞ்சும் வகையில் நடையாய் நடக்கும் இவரை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், இவரது விடா முயற்சியும் தொடர்கிறது.
விருதுநகர் ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி,44. திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.மாற்றுத்திறனாளியான இவர் 10 ம் வகுப்பு படித்து, விருதுநகரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுரியில் டூவீலர் மெக்கானிசம் முடித்துள்ளார். அதன்பின் சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இதுவரை வேலைக்கான அழைப்பு வரவில்லை. அரசு வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு 21 ஆண்டுகளாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.அவர் தரப்பில் வழங்கிய மனுவில், “என் மனைவி என்னுடன் இல்லை. மகன்தான் இருக்கிறார். வெல்டிங் வேலை பார்த்து மகனை கல்லுரியில் படிக்க வைக்கிறேன். வயதான என் அம்மாவும் என்னுடன் தான் உள்ளார். 

தற்போது உடல்நிலை சரியில்லாது வேலையின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். 1995 ல் டூவீலர் மெக்கானிசம் முடித்த நாள் முதல் வேலைக்கு பதிவு செய்து, வேலைக்கான அழைப்பு கடிதம் எதுவும் வரவில்லை, கடந்த 21 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை கேட்டுஅலைகிறேன். பல கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்து விட்டேன். யாரும் கண்டு கொள்வதும் இல்லை. அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வேலை கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளேன், ”என,குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment