FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, August 12, 2017

வேலை கேட்டு 21 ஆண்டாக அலையும் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி :கண்டு கொள்ளாத அதிகாரிகள்

09.08.2017 விருதுநகர்:வேலை கேட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு 21 ஆண்டுகளுக்கு மேலாக அலைகிறார் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி . கஜினி அரசரின் படைடெடுப்பை மிஞ்சும் வகையில் நடையாய் நடக்கும் இவரை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், இவரது விடா முயற்சியும் தொடர்கிறது.
விருதுநகர் ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி,44. திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.மாற்றுத்திறனாளியான இவர் 10 ம் வகுப்பு படித்து, விருதுநகரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுரியில் டூவீலர் மெக்கானிசம் முடித்துள்ளார். அதன்பின் சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இதுவரை வேலைக்கான அழைப்பு வரவில்லை. அரசு வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு 21 ஆண்டுகளாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.அவர் தரப்பில் வழங்கிய மனுவில், “என் மனைவி என்னுடன் இல்லை. மகன்தான் இருக்கிறார். வெல்டிங் வேலை பார்த்து மகனை கல்லுரியில் படிக்க வைக்கிறேன். வயதான என் அம்மாவும் என்னுடன் தான் உள்ளார். 

தற்போது உடல்நிலை சரியில்லாது வேலையின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். 1995 ல் டூவீலர் மெக்கானிசம் முடித்த நாள் முதல் வேலைக்கு பதிவு செய்து, வேலைக்கான அழைப்பு கடிதம் எதுவும் வரவில்லை, கடந்த 21 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை கேட்டுஅலைகிறேன். பல கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்து விட்டேன். யாரும் கண்டு கொள்வதும் இல்லை. அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வேலை கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளேன், ”என,குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment