FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, August 12, 2017

வேலை கேட்டு 21 ஆண்டாக அலையும் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி :கண்டு கொள்ளாத அதிகாரிகள்

09.08.2017 விருதுநகர்:வேலை கேட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு 21 ஆண்டுகளுக்கு மேலாக அலைகிறார் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி . கஜினி அரசரின் படைடெடுப்பை மிஞ்சும் வகையில் நடையாய் நடக்கும் இவரை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், இவரது விடா முயற்சியும் தொடர்கிறது.
விருதுநகர் ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி,44. திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.மாற்றுத்திறனாளியான இவர் 10 ம் வகுப்பு படித்து, விருதுநகரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுரியில் டூவீலர் மெக்கானிசம் முடித்துள்ளார். அதன்பின் சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இதுவரை வேலைக்கான அழைப்பு வரவில்லை. அரசு வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு 21 ஆண்டுகளாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.அவர் தரப்பில் வழங்கிய மனுவில், “என் மனைவி என்னுடன் இல்லை. மகன்தான் இருக்கிறார். வெல்டிங் வேலை பார்த்து மகனை கல்லுரியில் படிக்க வைக்கிறேன். வயதான என் அம்மாவும் என்னுடன் தான் உள்ளார். 

தற்போது உடல்நிலை சரியில்லாது வேலையின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். 1995 ல் டூவீலர் மெக்கானிசம் முடித்த நாள் முதல் வேலைக்கு பதிவு செய்து, வேலைக்கான அழைப்பு கடிதம் எதுவும் வரவில்லை, கடந்த 21 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை கேட்டுஅலைகிறேன். பல கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்து விட்டேன். யாரும் கண்டு கொள்வதும் இல்லை. அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வேலை கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளேன், ”என,குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment