FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, August 1, 2017

காதுகேளாதோர் ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய அணியை வரவேற்க ஆளில்லை: விமான நிலையத்தை விட்டு கிளம்ப வீரர்கள் மறுப்பு

01.08.2017
துருக்கியில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான 23-வது சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களை வரவேற்க அரசுதரப்பிலிருந்து ஒருவர் கூட செல்லவில்லை. இதனையடுத்து விமான நிலையத்தை விட்டு புறப்பட மாட்டோம் என்று வீரர்கள் அதிருப்தியில் மறுத்துள்ளனர்.

46 வீரர்கள், உடன் சென்ற பயிற்சியாளர்கள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி வெளியிட்டனர். இந்த ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது இந்திய அணி.

வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலிடம் பேச விரும்பியதாகவும் ஆனால் வீர்ர்கள் விருப்பத்துக்கு அவர் இணங்கவில்லை என்றும் தெரிகிறது.

இது குறித்து இந்திய அணியின் சார்பாகப் பேசிய கேத்தன் ஷா கூறும் போது, “இந்திய வீரர்கள் இந்த தொடரில் 8 பிரிவுகளில் போட்டியிட்டனர். இதில் 3 பிரிவுகளில் பதக்கம் வென்றுள்ளோம். மல்யுத்தத்தில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றுள்ளோம். லான் டென்னிஸில் வெண்கலம், கால்ஃப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளோம்.

பதக்கங்களை வென்ற அன்றே நாங்கள் மத்திய அரசிடம் நாட்டுக்கு நாங்கள் பெருமை சேர்த்ததாகத் தெரிவித்தோம். பதக்கம் வென்றவர்கள் நாட்டின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் ஒருவர் கூட, விளையாட்டுத் துறை அமைச்சர் கூட எங்களை வரவேற்க வரவில்லை.

எனவே எங்களுக்குத் தேவையெல்லாம் விளையாட்டுத் துறை அமைச்சர் அல்லது எந்த ஒரு அரசு அதிகாரியும் எங்களை விமான நிலையத்தில் வந்து பாராட்டியே ஆக வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதி வருகிறோம் என்று நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். ஆனால் எந்தவொரு பதிலும் வரவில்லை. அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம், ஆனால் அவர்கள் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது” என்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

No comments:

Post a Comment