FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Sunday, August 27, 2017

செவித்திறன் குறையுடையோர் - பி.காம், பிசிஏ படிப்புகளில் கடும் பாதிப்பு – முதலமைச்சர் தலையிட கோரிக்கை

26.08.2017
மாநிலம் முழுவதும் +2 தேர்ச்சி பெறும் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் மட்டுமே பட்டப்படிப்புகள் உள்ளன.மாற்றுத்திறனாளி துறையால் செய்கைமொழி ஆசிரியர்களுடன் பி.காம்.,பி.சி.ஏ. படிப்புகள் 2007 முதல் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு, இப்படிப்புகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் செய்திகள் கிடைத்துள்ளன. இது விஷயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க எமது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வெவ்வேறு விதிமுறைகள் 

பிசிஏ எனப்படும் இளங்கலை கணினி பயன்பாட்டியல் படிப்பு 2007-ல் மாநிலக்கல்லூரியில் அரசின் சார்பில் துவக்கப்பட்டபோது +2-வில் கணிதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆனால், 2016-17 கல்வியாண்டு முதல் இது கட்டாயமாக்கப்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

ஆக-31க்குள் சேர்க்கை முடிவடைகிற நிலையில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பிசிஏ படிப்புக்கு மாநிலக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதிலும், சிலர் வெளியேற காத்திருக்கின்றனர்.

அதே வேளையில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் சென்னையிலுள்ள 2 தனியார் கல்லூரிகளில் இதே வகுப்புகளுக்கு கணிதத்தேர்ச்சி கட்டாயம் இல்லாமல் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் 100 கணக்கான மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு அவர்களின் படிப்பும் வாழ்க்கையும் முடக்கப்படுகிறது.

சிறப்பு விடுதி ஏற்படுத்தித் தருக

மாநிலம் முழுவதும் இருந்து விடுதியை மட்டுமே நம்பி செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநிலக்கல்லூரியில் பயில வருகின்றனார். ஆனால், மாநிலக் கல்லூரியில் செயல்பட்ட விக்டோரிய விடுதி பழுது காரணமாக மூடப்பட்டுவிட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியான சிறப்பு விடுதியை ஏற்படுத்தித்தர உத்தரவிட வேண்டும்.

போதிய ஆசிரியரும் இல்லை 5 மாதமாக சம்பளமும் இல்லை

இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் சேர்த்து 2 நிரந்தரம் மற்றும் 3 தொகுப்பூதிய ஆசிரியர்கள் என 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். செய்கைமொழியுடன் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவில் கிடைக்காத நிலையில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்.

கடந்த 5 மாதங்களாக இந்த 3 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்ற செய்தியும் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, மேற்கண்ட பிரச்சனைகளில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

(பா. ஜான்சிராணி) (தே. இலட்சுமணன்) (எஸ்.நம்புராஜன்)
மாநில தலைவர்-9444405645 மாநில துணை தலைவர மாநில பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment