FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, August 27, 2017

செவித்திறன் குறையுடையோர் - பி.காம், பிசிஏ படிப்புகளில் கடும் பாதிப்பு – முதலமைச்சர் தலையிட கோரிக்கை

26.08.2017
மாநிலம் முழுவதும் +2 தேர்ச்சி பெறும் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் மட்டுமே பட்டப்படிப்புகள் உள்ளன.மாற்றுத்திறனாளி துறையால் செய்கைமொழி ஆசிரியர்களுடன் பி.காம்.,பி.சி.ஏ. படிப்புகள் 2007 முதல் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு, இப்படிப்புகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் செய்திகள் கிடைத்துள்ளன. இது விஷயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க எமது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வெவ்வேறு விதிமுறைகள் 

பிசிஏ எனப்படும் இளங்கலை கணினி பயன்பாட்டியல் படிப்பு 2007-ல் மாநிலக்கல்லூரியில் அரசின் சார்பில் துவக்கப்பட்டபோது +2-வில் கணிதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆனால், 2016-17 கல்வியாண்டு முதல் இது கட்டாயமாக்கப்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

ஆக-31க்குள் சேர்க்கை முடிவடைகிற நிலையில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பிசிஏ படிப்புக்கு மாநிலக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதிலும், சிலர் வெளியேற காத்திருக்கின்றனர்.

அதே வேளையில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் சென்னையிலுள்ள 2 தனியார் கல்லூரிகளில் இதே வகுப்புகளுக்கு கணிதத்தேர்ச்சி கட்டாயம் இல்லாமல் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் 100 கணக்கான மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு அவர்களின் படிப்பும் வாழ்க்கையும் முடக்கப்படுகிறது.

சிறப்பு விடுதி ஏற்படுத்தித் தருக

மாநிலம் முழுவதும் இருந்து விடுதியை மட்டுமே நம்பி செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநிலக்கல்லூரியில் பயில வருகின்றனார். ஆனால், மாநிலக் கல்லூரியில் செயல்பட்ட விக்டோரிய விடுதி பழுது காரணமாக மூடப்பட்டுவிட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியான சிறப்பு விடுதியை ஏற்படுத்தித்தர உத்தரவிட வேண்டும்.

போதிய ஆசிரியரும் இல்லை 5 மாதமாக சம்பளமும் இல்லை

இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் சேர்த்து 2 நிரந்தரம் மற்றும் 3 தொகுப்பூதிய ஆசிரியர்கள் என 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். செய்கைமொழியுடன் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவில் கிடைக்காத நிலையில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்.

கடந்த 5 மாதங்களாக இந்த 3 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்ற செய்தியும் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, மேற்கண்ட பிரச்சனைகளில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

(பா. ஜான்சிராணி) (தே. இலட்சுமணன்) (எஸ்.நம்புராஜன்)
மாநில தலைவர்-9444405645 மாநில துணை தலைவர மாநில பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment