FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, August 27, 2017

செவித்திறன் குறையுடையோர் - பி.காம், பிசிஏ படிப்புகளில் கடும் பாதிப்பு – முதலமைச்சர் தலையிட கோரிக்கை

26.08.2017
மாநிலம் முழுவதும் +2 தேர்ச்சி பெறும் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் மட்டுமே பட்டப்படிப்புகள் உள்ளன.மாற்றுத்திறனாளி துறையால் செய்கைமொழி ஆசிரியர்களுடன் பி.காம்.,பி.சி.ஏ. படிப்புகள் 2007 முதல் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு, இப்படிப்புகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் செய்திகள் கிடைத்துள்ளன. இது விஷயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க எமது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வெவ்வேறு விதிமுறைகள் 

பிசிஏ எனப்படும் இளங்கலை கணினி பயன்பாட்டியல் படிப்பு 2007-ல் மாநிலக்கல்லூரியில் அரசின் சார்பில் துவக்கப்பட்டபோது +2-வில் கணிதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆனால், 2016-17 கல்வியாண்டு முதல் இது கட்டாயமாக்கப்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

ஆக-31க்குள் சேர்க்கை முடிவடைகிற நிலையில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பிசிஏ படிப்புக்கு மாநிலக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதிலும், சிலர் வெளியேற காத்திருக்கின்றனர்.

அதே வேளையில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் சென்னையிலுள்ள 2 தனியார் கல்லூரிகளில் இதே வகுப்புகளுக்கு கணிதத்தேர்ச்சி கட்டாயம் இல்லாமல் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் 100 கணக்கான மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு அவர்களின் படிப்பும் வாழ்க்கையும் முடக்கப்படுகிறது.

சிறப்பு விடுதி ஏற்படுத்தித் தருக

மாநிலம் முழுவதும் இருந்து விடுதியை மட்டுமே நம்பி செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநிலக்கல்லூரியில் பயில வருகின்றனார். ஆனால், மாநிலக் கல்லூரியில் செயல்பட்ட விக்டோரிய விடுதி பழுது காரணமாக மூடப்பட்டுவிட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியான சிறப்பு விடுதியை ஏற்படுத்தித்தர உத்தரவிட வேண்டும்.

போதிய ஆசிரியரும் இல்லை 5 மாதமாக சம்பளமும் இல்லை

இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் சேர்த்து 2 நிரந்தரம் மற்றும் 3 தொகுப்பூதிய ஆசிரியர்கள் என 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். செய்கைமொழியுடன் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவில் கிடைக்காத நிலையில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்.

கடந்த 5 மாதங்களாக இந்த 3 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்ற செய்தியும் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, மேற்கண்ட பிரச்சனைகளில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

(பா. ஜான்சிராணி) (தே. இலட்சுமணன்) (எஸ்.நம்புராஜன்)
மாநில தலைவர்-9444405645 மாநில துணை தலைவர மாநில பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment