FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, August 27, 2017

செவித்திறன் குறையுடையோர் - பி.காம், பிசிஏ படிப்புகளில் கடும் பாதிப்பு – முதலமைச்சர் தலையிட கோரிக்கை

26.08.2017
மாநிலம் முழுவதும் +2 தேர்ச்சி பெறும் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் மட்டுமே பட்டப்படிப்புகள் உள்ளன.மாற்றுத்திறனாளி துறையால் செய்கைமொழி ஆசிரியர்களுடன் பி.காம்.,பி.சி.ஏ. படிப்புகள் 2007 முதல் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு, இப்படிப்புகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் செய்திகள் கிடைத்துள்ளன. இது விஷயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க எமது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வெவ்வேறு விதிமுறைகள் 

பிசிஏ எனப்படும் இளங்கலை கணினி பயன்பாட்டியல் படிப்பு 2007-ல் மாநிலக்கல்லூரியில் அரசின் சார்பில் துவக்கப்பட்டபோது +2-வில் கணிதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆனால், 2016-17 கல்வியாண்டு முதல் இது கட்டாயமாக்கப்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

ஆக-31க்குள் சேர்க்கை முடிவடைகிற நிலையில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பிசிஏ படிப்புக்கு மாநிலக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதிலும், சிலர் வெளியேற காத்திருக்கின்றனர்.

அதே வேளையில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் சென்னையிலுள்ள 2 தனியார் கல்லூரிகளில் இதே வகுப்புகளுக்கு கணிதத்தேர்ச்சி கட்டாயம் இல்லாமல் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் 100 கணக்கான மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு அவர்களின் படிப்பும் வாழ்க்கையும் முடக்கப்படுகிறது.

சிறப்பு விடுதி ஏற்படுத்தித் தருக

மாநிலம் முழுவதும் இருந்து விடுதியை மட்டுமே நம்பி செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநிலக்கல்லூரியில் பயில வருகின்றனார். ஆனால், மாநிலக் கல்லூரியில் செயல்பட்ட விக்டோரிய விடுதி பழுது காரணமாக மூடப்பட்டுவிட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியான சிறப்பு விடுதியை ஏற்படுத்தித்தர உத்தரவிட வேண்டும்.

போதிய ஆசிரியரும் இல்லை 5 மாதமாக சம்பளமும் இல்லை

இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் சேர்த்து 2 நிரந்தரம் மற்றும் 3 தொகுப்பூதிய ஆசிரியர்கள் என 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். செய்கைமொழியுடன் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவில் கிடைக்காத நிலையில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்.

கடந்த 5 மாதங்களாக இந்த 3 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்ற செய்தியும் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, மேற்கண்ட பிரச்சனைகளில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

(பா. ஜான்சிராணி) (தே. இலட்சுமணன்) (எஸ்.நம்புராஜன்)
மாநில தலைவர்-9444405645 மாநில துணை தலைவர மாநில பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment