FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, August 27, 2017

செவித்திறன் குறையுடையோர் - பி.காம், பிசிஏ படிப்புகளில் கடும் பாதிப்பு – முதலமைச்சர் தலையிட கோரிக்கை

26.08.2017
மாநிலம் முழுவதும் +2 தேர்ச்சி பெறும் செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் மட்டுமே பட்டப்படிப்புகள் உள்ளன.மாற்றுத்திறனாளி துறையால் செய்கைமொழி ஆசிரியர்களுடன் பி.காம்.,பி.சி.ஏ. படிப்புகள் 2007 முதல் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு, இப்படிப்புகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் செய்திகள் கிடைத்துள்ளன. இது விஷயத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க எமது சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வெவ்வேறு விதிமுறைகள் 

பிசிஏ எனப்படும் இளங்கலை கணினி பயன்பாட்டியல் படிப்பு 2007-ல் மாநிலக்கல்லூரியில் அரசின் சார்பில் துவக்கப்பட்டபோது +2-வில் கணிதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆனால், 2016-17 கல்வியாண்டு முதல் இது கட்டாயமாக்கப்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

ஆக-31க்குள் சேர்க்கை முடிவடைகிற நிலையில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பிசிஏ படிப்புக்கு மாநிலக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதிலும், சிலர் வெளியேற காத்திருக்கின்றனர்.

அதே வேளையில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் சென்னையிலுள்ள 2 தனியார் கல்லூரிகளில் இதே வகுப்புகளுக்கு கணிதத்தேர்ச்சி கட்டாயம் இல்லாமல் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் 100 கணக்கான மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு அவர்களின் படிப்பும் வாழ்க்கையும் முடக்கப்படுகிறது.

சிறப்பு விடுதி ஏற்படுத்தித் தருக

மாநிலம் முழுவதும் இருந்து விடுதியை மட்டுமே நம்பி செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநிலக்கல்லூரியில் பயில வருகின்றனார். ஆனால், மாநிலக் கல்லூரியில் செயல்பட்ட விக்டோரிய விடுதி பழுது காரணமாக மூடப்பட்டுவிட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியான சிறப்பு விடுதியை ஏற்படுத்தித்தர உத்தரவிட வேண்டும்.

போதிய ஆசிரியரும் இல்லை 5 மாதமாக சம்பளமும் இல்லை

இரண்டு பட்டப்படிப்புகளுக்கும் சேர்த்து 2 நிரந்தரம் மற்றும் 3 தொகுப்பூதிய ஆசிரியர்கள் என 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். செய்கைமொழியுடன் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய அளவில் கிடைக்காத நிலையில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்.

கடந்த 5 மாதங்களாக இந்த 3 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்ற செய்தியும் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, மேற்கண்ட பிரச்சனைகளில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

(பா. ஜான்சிராணி) (தே. இலட்சுமணன்) (எஸ்.நம்புராஜன்)
மாநில தலைவர்-9444405645 மாநில துணை தலைவர மாநில பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment