FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Saturday, August 12, 2017

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்


10.08.2017 சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உதவித்தொகையை வழங்க வேண்டும், முகவரி மாறினாலூம் உதவித்தொகையை நிறுத்தக் கூடாது, அடையாளச் சான்றை மாற்றக் கோரி வற்புறுத்தக் கூடாது என்பவன உள்ளிட்டக் கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களை பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment