FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, August 22, 2017

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அரசு உத்தரவு


சமூகப்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை தடுப்பதற்கு மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் தமிழக அரசின் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே. சத்யகோபால்,இஆப அவர்கள் தலைமையில் எழிலகத்தில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் திரு.ஆஷிஷ் குமார்,இஆப, சமூகப் பாதுகாப்புத்திட்ட இயக்குநர் திருமிகு சுதா தேவி,இஆப உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அனைத்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் ஜான்ஸிராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோரும், டிசம்பர்-3 இயக்கத்தின் சார்பில் தலைவர் தீபக், தேசிய பார்வையற்றோர் இணைய இயக்குநர் மனோகரன், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜமால் அலி உள்ளிட்ட மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கடந்த ஆக-10 அன்று தலைமை செயலகத்தில் சமூகநலத்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அரசின் சார்பில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதில் மாநிலம் முழுவதும் உள்ள இடற்பாடுகளை தடுக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய கலந்தாய்வு கூட்டங்களை வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் நடத்தவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போர் பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்கவும், மாவட்ட அரசு இணையதளங்களில் ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு ஆக-18 தேதியிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு குறித்த கூடுதல் விபரம் பின்வருமாறு.

வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போரை வரிசைப்படி ஆவணத்தில் பதிவு செய்வதும், கண்டிப்பாக சீனியாரிட்டி அடிப்படையிலேயே உதவித்தொகைக்கான உத்தரவு வழங்க வேண்டும். மன நிலை பாதித்தோர், பார்வையற்றோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பிரிவினர் இதுவரை விண்ணப்பித்து உதவித்தொகை வழங்கப்படாதவர்களின் படிவங்களை பரிசீலித்து உதவித்தொகை வழங்க வேண்டும். என்பன போன்ற உத்தரவுகள் வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment