FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, August 22, 2017

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அரசு உத்தரவு


சமூகப்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை தடுப்பதற்கு மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் தமிழக அரசின் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே. சத்யகோபால்,இஆப அவர்கள் தலைமையில் எழிலகத்தில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் திரு.ஆஷிஷ் குமார்,இஆப, சமூகப் பாதுகாப்புத்திட்ட இயக்குநர் திருமிகு சுதா தேவி,இஆப உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அனைத்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் ஜான்ஸிராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோரும், டிசம்பர்-3 இயக்கத்தின் சார்பில் தலைவர் தீபக், தேசிய பார்வையற்றோர் இணைய இயக்குநர் மனோகரன், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜமால் அலி உள்ளிட்ட மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கடந்த ஆக-10 அன்று தலைமை செயலகத்தில் சமூகநலத்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அரசின் சார்பில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதில் மாநிலம் முழுவதும் உள்ள இடற்பாடுகளை தடுக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய கலந்தாய்வு கூட்டங்களை வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் நடத்தவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போர் பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்கவும், மாவட்ட அரசு இணையதளங்களில் ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு ஆக-18 தேதியிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு குறித்த கூடுதல் விபரம் பின்வருமாறு.

வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போரை வரிசைப்படி ஆவணத்தில் பதிவு செய்வதும், கண்டிப்பாக சீனியாரிட்டி அடிப்படையிலேயே உதவித்தொகைக்கான உத்தரவு வழங்க வேண்டும். மன நிலை பாதித்தோர், பார்வையற்றோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பிரிவினர் இதுவரை விண்ணப்பித்து உதவித்தொகை வழங்கப்படாதவர்களின் படிவங்களை பரிசீலித்து உதவித்தொகை வழங்க வேண்டும். என்பன போன்ற உத்தரவுகள் வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment