FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, August 1, 2017

செம ஃபிட்டாக இருந்த இளம் நடிகர் த்ருவ் சர்மா திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

01.08.2017 பெங்களூர்: கன்னட நடிகர் த்ருவ் சர்மா திடீர் என்று மரணம் அடைந்துள்ளார். பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரும், நடிகருமான சுரேஷ் சர்மாவின் மகன் த்ருவ் சர்மா. காது கேளாத, வாய் பேச முடியாத அவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் அதிகம். அவர் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

த்ருவ் 
கடந்த சனிக்கிழமை த்ருவ் திடீர் என்று மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் பல உறுப்புகள் செயல் இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மரணம் 
மருத்துவமனையில் இருந்த த்ருவ் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.


சிசிஎல் 
திரையுலக பிரபலங்கள் விளையாடும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கிச்சா சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியில் விளையாடியவர் த்ருவ்.

பாராட்டு 
த்ருவ் கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். தனது குறைகளை பற்றிக் கவலைப்படாமல் வாழ்ந்த த்ருவ் ஃபிட்டாக இருந்தவர். இப்படி திடீர் என்று அவர் மரணம் அடைந்துள்ளது கன்னட திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment