FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, August 25, 2017

கணவர் வெறிச்செயல்: மாற்றுத்திறனாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை

24.08.2017
ஓசூர்: மாற்றுத்திறனாளி சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான சியாமளா என்ற மாற்றுத்திறனாளி பெண் அவரது கணவனால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஓசூர் சீதாராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் நஞ்சுண்டசாமி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மாற்றுத்திறனாளியான சியாமளா தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தார்.

சியாமளாவிற்கும் அவரது கணவர் நஞ்சுண்டசாமிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நஞ்சுண்டசாமி சியாமளாவை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சியாமளாவை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மனைவியை கொலை செய்த நஞ்சுண்டசாமியை கைது செய்தனர்.

இதனிடைய, இந்த சம்பவத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment