FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, August 25, 2017

கணவர் வெறிச்செயல்: மாற்றுத்திறனாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை

24.08.2017
ஓசூர்: மாற்றுத்திறனாளி சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான சியாமளா என்ற மாற்றுத்திறனாளி பெண் அவரது கணவனால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஓசூர் சீதாராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் நஞ்சுண்டசாமி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மாற்றுத்திறனாளியான சியாமளா தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தார்.

சியாமளாவிற்கும் அவரது கணவர் நஞ்சுண்டசாமிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நஞ்சுண்டசாமி சியாமளாவை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சியாமளாவை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மனைவியை கொலை செய்த நஞ்சுண்டசாமியை கைது செய்தனர்.

இதனிடைய, இந்த சம்பவத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment