FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, October 27, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளைத் தொடங்கிவைத்த கலெக்டர்!

24.10.2017
கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

அப்போது அவருடன் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வட்டாட்சியர் அருள் உள்பட பலர் உடன் இருந்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், "தமிழக அரசு வருடந்தோறும் மாற்றுத்திறனுடைய சிறப்பு பிரிவினர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அறிவுரை பெறப்பட்டதன் பேரில் கரூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கை, கால் ஊனமுற்ற ஆண்கள்/பெண்களுக்கு இறகுப் பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியும், டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி, பார்வையற்ற ஆண்கள்/பெண்களுக்கு கையுந்து பந்துப் போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள்/பெண்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதோர் ஆண்கள்/பெண்களுக்கு கபடிப் போட்டியும் நடைபெறுகிறது.

தடகள போட்டியில் கை, கால் ஊனமுற்ற ஆண்கள்/பெண்கள் இருபாலருக்கும் 50 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல்100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும், பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் சாப்ட் பந்து எறியும் போட்டி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டி மற்றும் காது கேளாதோருக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க இருக்கிற அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment