FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, October 27, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளைத் தொடங்கிவைத்த கலெக்டர்!

24.10.2017
கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

அப்போது அவருடன் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வட்டாட்சியர் அருள் உள்பட பலர் உடன் இருந்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், "தமிழக அரசு வருடந்தோறும் மாற்றுத்திறனுடைய சிறப்பு பிரிவினர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அறிவுரை பெறப்பட்டதன் பேரில் கரூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கை, கால் ஊனமுற்ற ஆண்கள்/பெண்களுக்கு இறகுப் பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியும், டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி, பார்வையற்ற ஆண்கள்/பெண்களுக்கு கையுந்து பந்துப் போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள்/பெண்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதோர் ஆண்கள்/பெண்களுக்கு கபடிப் போட்டியும் நடைபெறுகிறது.

தடகள போட்டியில் கை, கால் ஊனமுற்ற ஆண்கள்/பெண்கள் இருபாலருக்கும் 50 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல்100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும், பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் சாப்ட் பந்து எறியும் போட்டி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டி மற்றும் காது கேளாதோருக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க இருக்கிற அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment