FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, October 20, 2017

கேட்க முடியாத கைதட்டல்களைப் பார்த்து ரசிக்கும் மேடை கலைஞர்

15.10.2017
பிறந்தது முதல் காது கேட்காத இந்த மேடைக் கலைஞருக்கு ரசிகர்களின் கைதட்டலைப் பார்ப்பதே மிகப் பெரிய வரன்.

நான்கு வயதில் பெற்றோருடனும் அக்காவுடனும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார் ரமேஷ் மெய்யப்பன்.
ரமேஷின் பெற்றோருக்கு அது சுலபமான ஒரு முடிவல்ல..

குழந்தைகளில் ஒன்றை இந்தியாவில் விட்டு பிரிந்துவரவேண்டிய சூழல்.

எனினும் கடல் கடந்து வர வேண்டிய கட்டாயம்.

சிங்கப்பூரில் கேட்கும் திறன் குறைந்தோருக்கான பள்ளியில் ரமேஷையும் அக்காவையும் அவர்களின் பெற்றோர் சேர்த்துவிட்டனர்.

தமிழ் மொழி மட்டுமே தெரிந்த பெற்றோரிடம் தமது தேவைகளைப் புரிய வைப்பது ரமேஷுக்கு ஒரு சவாலாக இருந்தது.

இருதரப்புக்கும் இடையில் பாலமாக இருந்தது அவரின் அக்கா. பின்னர் நோயின் காரணமாக அக்காவுக்கும் செவிபுலன் பிரச்சினை ஏற்பட்டது.

எனினும் தமது பிள்ளை பருவம் குறித்து குறையேதும் இல்லை என்றார் 43 வயதாகும் ரமேஷ்.

வீட்டை நன்கு பராமரித்துக்கொண்ட அம்மா.

லிட்டில் இந்தியாவில் கடை வைத்திருந்த அப்பா.

கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியது ரமேஷின் வாழ்க்கையை மலரச் செய்தது.

பீஷான் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடிப்புத் திறனை வெளிகாட்டத் தொடங்கினார் ரமேஷ்.

23 வயதில் அந்தத் துறையில் முழுநேர ஆசிரியரானார்.
மேடை கலையில் ஆர்வம் அதிகரித்தது.

புத்தாக்க முறையில் மேடை நாடகங்களைப் படைக்க வேண்டும் என்ற ஆசை.

உணர்வுகளைப் பாவனையின்வழி வெளிகாட்டுவதில் தனிப்பட்ட மகிழ்ச்சி.

மொழி தேவையில்லை..மேடை இவரின் தனி உலகமாக இருந்தது.
ஆர்வத்தைத் தொடர வெளிநாட்டுக்குச் சென்றார் ரமேஷ்.

தற்போது ஸ்கோட்லந்தில் மனைவி மகள் ஆகியோருடன் வசிக்கும் ரமேஷ் மேடை நாடகங்களிலும் பெரும் பங்கு வகித்துவருகிறார்.

அவ்வப்போது சிங்கப்பூரின் நிகழ்ச்சிகளிலும் கலந்து செல்கிறார் ரமேஷ்.

பொம்மலாட்டம், வசனமில்லா நாடகம், வான்சாகச உடற்பயிற்சி போன்றவை அவரின் மேடை படைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

படைப்புகளின் இறுதிவரை ரமேஷால் கேட்க முடியாது என ரசிகர்களுக்குத் தெரியாத வகையிலே பெரும்பாலும் திட்டமிடப்பட்டிருக்கும்.

தமது படைப்பின் அடிப்படையிலேயே தமக்குப் பாராட்டுகள் வரவேண்டும் என்பது ரமேஷின் இலக்கு.

குறையையும் தாண்டி கற்பனை திறனுக்கு மதிப்புகொடுக்க வேண்டும்.
உடற்குறையுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பது குறித்து மேலும் சிந்திக்க வேண்டும்.

சவால்கள் இல்லாத வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை என்பதில் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளார் ரமேஷ்.

No comments:

Post a Comment