FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, October 20, 2017

கேட்க முடியாத கைதட்டல்களைப் பார்த்து ரசிக்கும் மேடை கலைஞர்

15.10.2017
பிறந்தது முதல் காது கேட்காத இந்த மேடைக் கலைஞருக்கு ரசிகர்களின் கைதட்டலைப் பார்ப்பதே மிகப் பெரிய வரன்.

நான்கு வயதில் பெற்றோருடனும் அக்காவுடனும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார் ரமேஷ் மெய்யப்பன்.
ரமேஷின் பெற்றோருக்கு அது சுலபமான ஒரு முடிவல்ல..

குழந்தைகளில் ஒன்றை இந்தியாவில் விட்டு பிரிந்துவரவேண்டிய சூழல்.

எனினும் கடல் கடந்து வர வேண்டிய கட்டாயம்.

சிங்கப்பூரில் கேட்கும் திறன் குறைந்தோருக்கான பள்ளியில் ரமேஷையும் அக்காவையும் அவர்களின் பெற்றோர் சேர்த்துவிட்டனர்.

தமிழ் மொழி மட்டுமே தெரிந்த பெற்றோரிடம் தமது தேவைகளைப் புரிய வைப்பது ரமேஷுக்கு ஒரு சவாலாக இருந்தது.

இருதரப்புக்கும் இடையில் பாலமாக இருந்தது அவரின் அக்கா. பின்னர் நோயின் காரணமாக அக்காவுக்கும் செவிபுலன் பிரச்சினை ஏற்பட்டது.

எனினும் தமது பிள்ளை பருவம் குறித்து குறையேதும் இல்லை என்றார் 43 வயதாகும் ரமேஷ்.

வீட்டை நன்கு பராமரித்துக்கொண்ட அம்மா.

லிட்டில் இந்தியாவில் கடை வைத்திருந்த அப்பா.

கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியது ரமேஷின் வாழ்க்கையை மலரச் செய்தது.

பீஷான் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடிப்புத் திறனை வெளிகாட்டத் தொடங்கினார் ரமேஷ்.

23 வயதில் அந்தத் துறையில் முழுநேர ஆசிரியரானார்.
மேடை கலையில் ஆர்வம் அதிகரித்தது.

புத்தாக்க முறையில் மேடை நாடகங்களைப் படைக்க வேண்டும் என்ற ஆசை.

உணர்வுகளைப் பாவனையின்வழி வெளிகாட்டுவதில் தனிப்பட்ட மகிழ்ச்சி.

மொழி தேவையில்லை..மேடை இவரின் தனி உலகமாக இருந்தது.
ஆர்வத்தைத் தொடர வெளிநாட்டுக்குச் சென்றார் ரமேஷ்.

தற்போது ஸ்கோட்லந்தில் மனைவி மகள் ஆகியோருடன் வசிக்கும் ரமேஷ் மேடை நாடகங்களிலும் பெரும் பங்கு வகித்துவருகிறார்.

அவ்வப்போது சிங்கப்பூரின் நிகழ்ச்சிகளிலும் கலந்து செல்கிறார் ரமேஷ்.

பொம்மலாட்டம், வசனமில்லா நாடகம், வான்சாகச உடற்பயிற்சி போன்றவை அவரின் மேடை படைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

படைப்புகளின் இறுதிவரை ரமேஷால் கேட்க முடியாது என ரசிகர்களுக்குத் தெரியாத வகையிலே பெரும்பாலும் திட்டமிடப்பட்டிருக்கும்.

தமது படைப்பின் அடிப்படையிலேயே தமக்குப் பாராட்டுகள் வரவேண்டும் என்பது ரமேஷின் இலக்கு.

குறையையும் தாண்டி கற்பனை திறனுக்கு மதிப்புகொடுக்க வேண்டும்.
உடற்குறையுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பது குறித்து மேலும் சிந்திக்க வேண்டும்.

சவால்கள் இல்லாத வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை என்பதில் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளார் ரமேஷ்.

No comments:

Post a Comment