FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, October 20, 2017

கேட்க முடியாத கைதட்டல்களைப் பார்த்து ரசிக்கும் மேடை கலைஞர்

15.10.2017
பிறந்தது முதல் காது கேட்காத இந்த மேடைக் கலைஞருக்கு ரசிகர்களின் கைதட்டலைப் பார்ப்பதே மிகப் பெரிய வரன்.

நான்கு வயதில் பெற்றோருடனும் அக்காவுடனும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார் ரமேஷ் மெய்யப்பன்.
ரமேஷின் பெற்றோருக்கு அது சுலபமான ஒரு முடிவல்ல..

குழந்தைகளில் ஒன்றை இந்தியாவில் விட்டு பிரிந்துவரவேண்டிய சூழல்.

எனினும் கடல் கடந்து வர வேண்டிய கட்டாயம்.

சிங்கப்பூரில் கேட்கும் திறன் குறைந்தோருக்கான பள்ளியில் ரமேஷையும் அக்காவையும் அவர்களின் பெற்றோர் சேர்த்துவிட்டனர்.

தமிழ் மொழி மட்டுமே தெரிந்த பெற்றோரிடம் தமது தேவைகளைப் புரிய வைப்பது ரமேஷுக்கு ஒரு சவாலாக இருந்தது.

இருதரப்புக்கும் இடையில் பாலமாக இருந்தது அவரின் அக்கா. பின்னர் நோயின் காரணமாக அக்காவுக்கும் செவிபுலன் பிரச்சினை ஏற்பட்டது.

எனினும் தமது பிள்ளை பருவம் குறித்து குறையேதும் இல்லை என்றார் 43 வயதாகும் ரமேஷ்.

வீட்டை நன்கு பராமரித்துக்கொண்ட அம்மா.

லிட்டில் இந்தியாவில் கடை வைத்திருந்த அப்பா.

கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியது ரமேஷின் வாழ்க்கையை மலரச் செய்தது.

பீஷான் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடிப்புத் திறனை வெளிகாட்டத் தொடங்கினார் ரமேஷ்.

23 வயதில் அந்தத் துறையில் முழுநேர ஆசிரியரானார்.
மேடை கலையில் ஆர்வம் அதிகரித்தது.

புத்தாக்க முறையில் மேடை நாடகங்களைப் படைக்க வேண்டும் என்ற ஆசை.

உணர்வுகளைப் பாவனையின்வழி வெளிகாட்டுவதில் தனிப்பட்ட மகிழ்ச்சி.

மொழி தேவையில்லை..மேடை இவரின் தனி உலகமாக இருந்தது.
ஆர்வத்தைத் தொடர வெளிநாட்டுக்குச் சென்றார் ரமேஷ்.

தற்போது ஸ்கோட்லந்தில் மனைவி மகள் ஆகியோருடன் வசிக்கும் ரமேஷ் மேடை நாடகங்களிலும் பெரும் பங்கு வகித்துவருகிறார்.

அவ்வப்போது சிங்கப்பூரின் நிகழ்ச்சிகளிலும் கலந்து செல்கிறார் ரமேஷ்.

பொம்மலாட்டம், வசனமில்லா நாடகம், வான்சாகச உடற்பயிற்சி போன்றவை அவரின் மேடை படைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

படைப்புகளின் இறுதிவரை ரமேஷால் கேட்க முடியாது என ரசிகர்களுக்குத் தெரியாத வகையிலே பெரும்பாலும் திட்டமிடப்பட்டிருக்கும்.

தமது படைப்பின் அடிப்படையிலேயே தமக்குப் பாராட்டுகள் வரவேண்டும் என்பது ரமேஷின் இலக்கு.

குறையையும் தாண்டி கற்பனை திறனுக்கு மதிப்புகொடுக்க வேண்டும்.
உடற்குறையுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பது குறித்து மேலும் சிந்திக்க வேண்டும்.

சவால்கள் இல்லாத வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை என்பதில் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளார் ரமேஷ்.

No comments:

Post a Comment