FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, October 8, 2017

’காது கேளாவதர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்க வேண்டும்’ -கேரள இளைஞர் கோரிக்கை

07.10.2017
காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கவும், சம உரிமையை அளிக்கவும் வலியுறுத்தி, இந்தியா முழுவதும் இரு சக்கர வாகனத்தில் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வரும் கேரள இளைஞர் சினான் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று கோவை வந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காது கேளாத, வாய் பேச இயலாதவர்கள் தங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி, நீண்ட நாள்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போராடி வருகின்றனர். பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கவும், சம உரிமை அளிக்க வலியுறுத்தியும் இந்தியா, பூட்டான்,நேபாள் ஆகிய மூன்று நாடுகளில் 16,000 கிலோ மீட்டர் தூரத்தை தனது இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார் சினான் என்ற கேரள இளைஞர். இவர் தனது பயணத்தை ஜீலை மாதம் 13-ம் தேதியன்று கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, செப்டம்பர் மாதம் 25-ம் தேதி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்நிலையில், பூட்டான், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று காது கேட்காத வாய் பேசமுடியாதவர்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தியதால் இவரது பயணம் வெற்றிப் பயணமாக அமைந்ததுள்ளதாக சினான் தெரிவித்தார்.

தனது பயணத்தை முடித்துவிட்டு சினான் இன்று கோவை வந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சினான் உறவினர், 'கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியா, நேபால், பூட்டான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சியான் இந்தியா முழுவதும் உள்ள காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும், எங்களாலும் மற்றவர்கள் போல் வாகனங்கள் ஓட்ட இயலும் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தப்பயணத்தின் போது வாய் பேசமுடியாத , காது கேட்காத அமைப்பின் சார்பாக உதவிகள் கிடைத்ததாகவும், கண்ணாடி பார்த்து தன்னால் சிறப்பாக வண்டி ஓட்ட முடிந்ததாகவும் குறிப்பிட்டார். பயணத்தின்போது எந்த விபத்தும் இல்லாமல் வண்டி ஓட்டமுடிந்ததாகவும், அனைத்து வாய் பேசமுடியாதவர்கள் மற்றும் காது கேளாவதர்களுக்குச் சம உரிமை வழங்குவதோடு, ஓட்டுநர் உரிமைத்தை வழங்க நடவடிக்கை எடுக்க தமிழகம் உட்பட சில மாநிலங்கள் முன் வர வேண்டும்' என்றார்.

1 comment: