FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, October 8, 2017

’காது கேளாவதர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்க வேண்டும்’ -கேரள இளைஞர் கோரிக்கை

07.10.2017
காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கவும், சம உரிமையை அளிக்கவும் வலியுறுத்தி, இந்தியா முழுவதும் இரு சக்கர வாகனத்தில் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வரும் கேரள இளைஞர் சினான் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று கோவை வந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காது கேளாத, வாய் பேச இயலாதவர்கள் தங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி, நீண்ட நாள்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போராடி வருகின்றனர். பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கவும், சம உரிமை அளிக்க வலியுறுத்தியும் இந்தியா, பூட்டான்,நேபாள் ஆகிய மூன்று நாடுகளில் 16,000 கிலோ மீட்டர் தூரத்தை தனது இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார் சினான் என்ற கேரள இளைஞர். இவர் தனது பயணத்தை ஜீலை மாதம் 13-ம் தேதியன்று கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, செப்டம்பர் மாதம் 25-ம் தேதி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்நிலையில், பூட்டான், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று காது கேட்காத வாய் பேசமுடியாதவர்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தியதால் இவரது பயணம் வெற்றிப் பயணமாக அமைந்ததுள்ளதாக சினான் தெரிவித்தார்.

தனது பயணத்தை முடித்துவிட்டு சினான் இன்று கோவை வந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சினான் உறவினர், 'கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியா, நேபால், பூட்டான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சியான் இந்தியா முழுவதும் உள்ள காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும், எங்களாலும் மற்றவர்கள் போல் வாகனங்கள் ஓட்ட இயலும் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தப்பயணத்தின் போது வாய் பேசமுடியாத , காது கேட்காத அமைப்பின் சார்பாக உதவிகள் கிடைத்ததாகவும், கண்ணாடி பார்த்து தன்னால் சிறப்பாக வண்டி ஓட்ட முடிந்ததாகவும் குறிப்பிட்டார். பயணத்தின்போது எந்த விபத்தும் இல்லாமல் வண்டி ஓட்டமுடிந்ததாகவும், அனைத்து வாய் பேசமுடியாதவர்கள் மற்றும் காது கேளாவதர்களுக்குச் சம உரிமை வழங்குவதோடு, ஓட்டுநர் உரிமைத்தை வழங்க நடவடிக்கை எடுக்க தமிழகம் உட்பட சில மாநிலங்கள் முன் வர வேண்டும்' என்றார்.

1 comment: