FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, April 24, 2018

வழிதவறிச் சென்ற 3 வயது சிறுமிக்கு..!! துணையாக நின்ற காதுகேளாத..!! வளர்ப்பு நாயின் பாசம்..!!


ஆஸ்திரேலியாவில், வழிதவறிச் சென்ற 3 வயது சிறுமிக்கு துணையாக நின்று, பாதுகாத்த வளர்ப்பு நாயின் விசுவாசம், நெகிழச் செய்வதாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் Cherry Gully பகுதியை சேர்ந்த, அரோரா என்ற 3 வயது பெண் குழந்தை மாயமானது. மலைப்பாங்கான அப்பகுதியில் குழந்தையை தேடுவதில் மீட்புக்குழுவினருக்கும் உறவினர்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.

எனினும், வசிப்பிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில், குழந்தை அரோரா, லேசான காயங்களுடன் மீட்கப்பட்டது. குழந்தையுடன் மேக்ஸ் என்ற வயதான, காதுகேளாத நாய், 15 மணி நேரத்துக்கும் மேலாக துணையாக இருந்து பாதுகாத்துள்ளது.

நன்றியுணர்வோடு குழந்தையை காத்த மேக்ஸின் செயல், பலரையும் நெகிழச் செய்துள்ளது. Queensland போலீஸார் தங்களது முகநூல் பக்கத்தில் நாய் மேக்ஸின் படத்தை பதிவுட்டு புகழாரம் சூட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment