FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, April 24, 2018

பாலியல் வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் அமைதி ஊர்வலம்

22.04.2018
சென்னை,
பாலியல் வன்கொடுமையால் பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு, தமிழ்நாடு காது கேளாத மகளிர் சங்கம், தமிழ்நாடு காது கேளாத விளையாட்டுத்துறை கவுன்சில், டெப் என்பிலேடு பவுண்டேஷன் சார்பில் சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது.

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அதே சாலையில் உள்ள தீயணைப்பு அலுவலகம் வரை சென்று திரும்பியது. சங்க நிர்வாகிகள் ஜமால் அலி, சுவாமிநாதன் தலைமை தாங்கினர். காயத்ரி, பெரோஸ்கான், சந்தோஷ்குமார், சக்திவேல், பாலா உள்பட காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சங்கத்தின் சைகை மொழிபெயர்ப்பாளர் வினோத் கூறுகையில், பாலியல் வன்கொடுமை போன்ற இழிவான செயலை முற்றிலும் தடுக்க அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கடும் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் எடுக்கப்பட்டால், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். அரபு நாடுகளில் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்படுகிறார்கள். எனவே சமுதாய மற்றும் தேச நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment