FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, April 24, 2018

பாலியல் வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் அமைதி ஊர்வலம்

22.04.2018
சென்னை,
பாலியல் வன்கொடுமையால் பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு, தமிழ்நாடு காது கேளாத மகளிர் சங்கம், தமிழ்நாடு காது கேளாத விளையாட்டுத்துறை கவுன்சில், டெப் என்பிலேடு பவுண்டேஷன் சார்பில் சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது.

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அதே சாலையில் உள்ள தீயணைப்பு அலுவலகம் வரை சென்று திரும்பியது. சங்க நிர்வாகிகள் ஜமால் அலி, சுவாமிநாதன் தலைமை தாங்கினர். காயத்ரி, பெரோஸ்கான், சந்தோஷ்குமார், சக்திவேல், பாலா உள்பட காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சங்கத்தின் சைகை மொழிபெயர்ப்பாளர் வினோத் கூறுகையில், பாலியல் வன்கொடுமை போன்ற இழிவான செயலை முற்றிலும் தடுக்க அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கடும் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் எடுக்கப்பட்டால், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். அரபு நாடுகளில் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்படுகிறார்கள். எனவே சமுதாய மற்றும் தேச நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment