FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, April 24, 2018

பாலியல் வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் அமைதி ஊர்வலம்

22.04.2018
சென்னை,
பாலியல் வன்கொடுமையால் பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு, தமிழ்நாடு காது கேளாத மகளிர் சங்கம், தமிழ்நாடு காது கேளாத விளையாட்டுத்துறை கவுன்சில், டெப் என்பிலேடு பவுண்டேஷன் சார்பில் சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது.

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அதே சாலையில் உள்ள தீயணைப்பு அலுவலகம் வரை சென்று திரும்பியது. சங்க நிர்வாகிகள் ஜமால் அலி, சுவாமிநாதன் தலைமை தாங்கினர். காயத்ரி, பெரோஸ்கான், சந்தோஷ்குமார், சக்திவேல், பாலா உள்பட காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சங்கத்தின் சைகை மொழிபெயர்ப்பாளர் வினோத் கூறுகையில், பாலியல் வன்கொடுமை போன்ற இழிவான செயலை முற்றிலும் தடுக்க அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கடும் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் எடுக்கப்பட்டால், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். அரபு நாடுகளில் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்படுகிறார்கள். எனவே சமுதாய மற்றும் தேச நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment