FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, April 13, 2018

தடகளத்தில் அதகளம்: குறைகளை தாண்டி உயரம் தொட்ட கார்த்திக்

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்திக். பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர். தடகளப் போட்டிகளில் அதகளம் செய்து, கொத் துக் கொத்தாக வாங்கிய பதக்கங்களால் வீட்டை நிறைத்து வைத்திருக்கிறார்.

தந்தை சரவணன் மாட்டு வண்டித் தொழிலாளி. காது கேளாத, வாய் பேச முடியாத கார்த்திக், படித்தது தோட்டக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். பாடங்களை கேட்கவும் முடியாது. அதுபற்றி வாய் திறந்து பேசவும் முடியாது. கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போடுவதை பார்த்து எழுத, படிக்க ஆரம்பித்தார்.

கார்த்திக்கின் திறமைகளை கணித்த ஆசிரியர் ஒருவர், அவருக்கு போல்வால்ட் பயிற்சி அளித்து, பொதுப் பிரிவு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்தார். அவர் கணிப்பு பொய்க்கவில்லை. மாவட்ட அளவில் 2 முறை முதலிடம், கோட்ட அளவில் 3-ம் இடம் என கார்த்திக்கின் சாதனைப் பயணம் தொடங்கியது. போல்வால்ட் டில் 3 மீட்டர் உயரம் வரை தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து போல்வால்ட் பயிற்சி பெற போதுமான வசதியில்லாததால் உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பொதுப் பிரிவில் உயரம் தாண்டுதலில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். தடை தாண்டும் ஓட்டத்தில் 3-ம் இடத்தைப் பிடித்து அசத்தினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கபடி, குண்டு எறிதல் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம். 100 மீ, 200 மீ, நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் 2-ம் இடம். 7-வது தமிழ்நாடு காது கேளாதோருக்கான உயரம் தாண்டுதலில் தமிழக அளவில் முதலிடம். பின்னர் 8-வது தமிழ்நாடு காது கேளாதோருக்கான போட்டியில் போல்வால்ட், தடை தாண்டும் ஓட்டம், ட்ரிபிள் ஜம்ப் ஆகியவற்றில் முதலிடம் என வெற்றிகளை நோக்கி ஓட ஆரம்பித்தார் கார்த்திக்.

கடந்தாண்டு நடைபெற்ற காது கேளாதோருக்கான தேசிய போட்டி யில் உயரம் தாண்டுதலும் (1.90 மீட்டர்) அதேபோட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். கடந்தாண்டு டிசம்பரில் நடந்த தேசிய காது கேளாதோருக்கான போட்டியில் உயரம் தாண்டுதலிலும் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் 2 வெள்ளிப் பதக்கம் இவர் வசமானது.

மாவட்ட, மாநில, தேசிய அளவில் செய்த சாதனையால் கார்த்திக் சர்வதேச அரங்குக்குச் சென்றார். துருக்கியில் கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற சர்வதேச டெஃப்லிம்பிக் (காது கேளாதோருக்கான) போட்டியில், 1.85 மீட்டர் உயரம் தாண்டி 8-ம் இடத்தைப் பிடித்தார். உரிய வசதியும் அதற்கான பயிற்சியும் இல்லாத எளிய குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், சர்வதேச அளவில் போட்டியில் பங்கேற்றதே பெருமைக்குரிய விசயம் என்றாலும், உரிய பயிற்சி கிடைத்திருந்தால் நிச்சயம் பதக்கப் பட்டியலில் இடம் பெற் றிருப்பார்.

பிளஸ் 2 முடித்த பிறகு திருச்சி கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பில் சேர்ந்தவரால் படிப்பையும் தொடர முடியவில்லை. இதையறிந்த கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் அவர் விரும்பிய பாடப்பிரிவில் இடம் வழங்கி அவருக்கு தேவையான பயிற்சிகள் அளிப்பதாக உறுதி கூறியுள்ளது. மீண்டும் படிப்பும் பதக்க வேட்டையும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment