FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, April 21, 2018

காது கேளாத இளம் பெண் கீதாவுக்கு மாப்பிள்ளை தேடும் அமைச்சர் சுஷ்மா

21.04.2018
இந்துார்: 'பாக்.,கில் இருந்து வந்த, இந்திய இளம் பெண் கீதாவை திருமணம் செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் தங்கள், சுய விபரங்களை அனுப்பியுள்ளனர்.

இந்தியாவைச் சசேர்ந்தவர், கீதா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர், தன், 9வது வயதில், பெற்றோரை பிரிந்தார். பாகிஸ்தானுக்கு செல் லும், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறுத லாக ஏறி, லாகூருக்குச் சென்றார். அங்கு, தன்னார்வலர் ஒருவர், கீதாவை தத்தெடுத்து வளர்த்தார்.வெளியுறவு துறை அமைச்சரும்,

பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜின் உதவியால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கீதா, இந்தியா வந்தார்.

அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உதவியுடன், இந்தியாவில் வசிக்கும், தன்பெற்றோரை தேடி வருகிறார்.எழுத்து பயிற்சி தற்போது, 24 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு, எழுத, படிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத தால், மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார்.

இது குறித்து, 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கீதாவை திருமணம்செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பு, தற்போது, அவர் தங்கியுள்ள ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி, ஞானேந்திர புரோஹித்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

20 பேர் விருப்பம்:

இது குறித்து, புரோஹித் கூறியதாவது:' பேஸ்புக்'கில் வெளியான தகவல்களை பார்த்து, 20 பேர், தங்கள் சுய விபரங்களை அனுப்பிஉள்ளனர். அவர்களில், இரண்டு பேரை தவிர, மற்றவர் கள், காது கேளாத, வாய் பேச முடியாத இளைஞர்கள். இந்த விபரங்கள், மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கீதாவின் விருப்பப்படி தான், திருமணம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment