FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 21, 2018

காது கேளாத இளம் பெண் கீதாவுக்கு மாப்பிள்ளை தேடும் அமைச்சர் சுஷ்மா

21.04.2018
இந்துார்: 'பாக்.,கில் இருந்து வந்த, இந்திய இளம் பெண் கீதாவை திருமணம் செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் தங்கள், சுய விபரங்களை அனுப்பியுள்ளனர்.

இந்தியாவைச் சசேர்ந்தவர், கீதா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர், தன், 9வது வயதில், பெற்றோரை பிரிந்தார். பாகிஸ்தானுக்கு செல் லும், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறுத லாக ஏறி, லாகூருக்குச் சென்றார். அங்கு, தன்னார்வலர் ஒருவர், கீதாவை தத்தெடுத்து வளர்த்தார்.வெளியுறவு துறை அமைச்சரும்,

பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜின் உதவியால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கீதா, இந்தியா வந்தார்.

அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உதவியுடன், இந்தியாவில் வசிக்கும், தன்பெற்றோரை தேடி வருகிறார்.எழுத்து பயிற்சி தற்போது, 24 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு, எழுத, படிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத தால், மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார்.

இது குறித்து, 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கீதாவை திருமணம்செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பு, தற்போது, அவர் தங்கியுள்ள ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி, ஞானேந்திர புரோஹித்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

20 பேர் விருப்பம்:

இது குறித்து, புரோஹித் கூறியதாவது:' பேஸ்புக்'கில் வெளியான தகவல்களை பார்த்து, 20 பேர், தங்கள் சுய விபரங்களை அனுப்பிஉள்ளனர். அவர்களில், இரண்டு பேரை தவிர, மற்றவர் கள், காது கேளாத, வாய் பேச முடியாத இளைஞர்கள். இந்த விபரங்கள், மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கீதாவின் விருப்பப்படி தான், திருமணம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment