FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, April 21, 2018

காது கேளாத இளம் பெண் கீதாவுக்கு மாப்பிள்ளை தேடும் அமைச்சர் சுஷ்மா

21.04.2018
இந்துார்: 'பாக்.,கில் இருந்து வந்த, இந்திய இளம் பெண் கீதாவை திருமணம் செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் தங்கள், சுய விபரங்களை அனுப்பியுள்ளனர்.

இந்தியாவைச் சசேர்ந்தவர், கீதா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர், தன், 9வது வயதில், பெற்றோரை பிரிந்தார். பாகிஸ்தானுக்கு செல் லும், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறுத லாக ஏறி, லாகூருக்குச் சென்றார். அங்கு, தன்னார்வலர் ஒருவர், கீதாவை தத்தெடுத்து வளர்த்தார்.வெளியுறவு துறை அமைச்சரும்,

பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜின் உதவியால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கீதா, இந்தியா வந்தார்.

அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உதவியுடன், இந்தியாவில் வசிக்கும், தன்பெற்றோரை தேடி வருகிறார்.எழுத்து பயிற்சி தற்போது, 24 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு, எழுத, படிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத தால், மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார்.

இது குறித்து, 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கீதாவை திருமணம்செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பு, தற்போது, அவர் தங்கியுள்ள ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி, ஞானேந்திர புரோஹித்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

20 பேர் விருப்பம்:

இது குறித்து, புரோஹித் கூறியதாவது:' பேஸ்புக்'கில் வெளியான தகவல்களை பார்த்து, 20 பேர், தங்கள் சுய விபரங்களை அனுப்பிஉள்ளனர். அவர்களில், இரண்டு பேரை தவிர, மற்றவர் கள், காது கேளாத, வாய் பேச முடியாத இளைஞர்கள். இந்த விபரங்கள், மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கீதாவின் விருப்பப்படி தான், திருமணம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment