FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, March 16, 2019

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

14.03.2019
நாமக்கல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. நாமக்கல் தொகுதியில் 13 லட்சத்து 77 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். கை, கால் ஊனம், கண் பார்வையற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியா தோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு, தொழு நோய் பாதிப்பு மற்றும் குள்ளத்தன்மையுடன் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் தேவையான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ‘பெர்சன் வித் டிசைபல்’ என்ற புதிய வகை செயலியை (ஆப்) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்க வேண்டும். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, தங்களது தேவைகளை பதிவிட வேண்டும். பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு ஏற்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும். இந்த ஆதாரத்தை பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் சக்கர நாற்காலி உள்ளிட்ட தங்களுக்கு பயன்பட கூடிய பொருட்களை கேட்டுப் பெற முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றாலும் இதில் புகார் பதிவு செய்யலாம். பதிவிட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment