FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, March 16, 2019

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

14.03.2019
நாமக்கல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. நாமக்கல் தொகுதியில் 13 லட்சத்து 77 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். கை, கால் ஊனம், கண் பார்வையற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியா தோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு, தொழு நோய் பாதிப்பு மற்றும் குள்ளத்தன்மையுடன் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் தேவையான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ‘பெர்சன் வித் டிசைபல்’ என்ற புதிய வகை செயலியை (ஆப்) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்க வேண்டும். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, தங்களது தேவைகளை பதிவிட வேண்டும். பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு ஏற்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும். இந்த ஆதாரத்தை பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் சக்கர நாற்காலி உள்ளிட்ட தங்களுக்கு பயன்பட கூடிய பொருட்களை கேட்டுப் பெற முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றாலும் இதில் புகார் பதிவு செய்யலாம். பதிவிட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment