FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, March 16, 2019

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

14.03.2019
நாமக்கல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. நாமக்கல் தொகுதியில் 13 லட்சத்து 77 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். கை, கால் ஊனம், கண் பார்வையற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியா தோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு, தொழு நோய் பாதிப்பு மற்றும் குள்ளத்தன்மையுடன் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் தேவையான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ‘பெர்சன் வித் டிசைபல்’ என்ற புதிய வகை செயலியை (ஆப்) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்க வேண்டும். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, தங்களது தேவைகளை பதிவிட வேண்டும். பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு ஏற்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும். இந்த ஆதாரத்தை பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் சக்கர நாற்காலி உள்ளிட்ட தங்களுக்கு பயன்பட கூடிய பொருட்களை கேட்டுப் பெற முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றாலும் இதில் புகார் பதிவு செய்யலாம். பதிவிட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment