FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, March 16, 2019

மனைவி, குழந்தையை கொலை செய்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனைவேலூர் கோர்ட்டு தீர்ப்பு

08.03.2019
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே குடியிருப்பு பகுதி சிவசக்திசெல்வவிநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற அணிலா (வயது 38). கூலித்தொழிலாளியான இவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மீனா என்ற மணிலா (20). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது.

பிரகாஷ் தனது மனைவி மீனாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் 4.5.2016 அன்று அதிகாலை 4.30 மணி அளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் கிடந்த கல்லை எடுத்து மீனாவின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தார். மேலும் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்து குழந்தையையும் கொலை செய்தார். இந்த சம்பவம் அப்போது வேலூர் மற்றும் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தவழக்கு வேலூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், இந்த வழக்கு வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி எஸ்.குணசேகரன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் மாற்றுத்திறனாளி என்பதால் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வசதியாக சத்துவாச்சாரியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் மணிமாறனுக்கு சிறப்பு அழைப்பாணை விடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு விசாரணைக்கு வரும் சமயங்களில் ஆசிரியர் மணிமாறனும் கோர்ட்டில் ஆஜராகி, சைகை மூலம் பிரகாசுக்கு விளக்கி விசாரணைக்கு உதவினார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று கோர்ட்டில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை வாதாடினார். ஆசிரியர் மணிமாறனும் ஆஜராகினார்.

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.குணசேகரன் தீர்ப்பு கூறினார். அதில், பிரகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மனைவியை கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும், குழந்தையை கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த இரட்டை ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் கூறி உள்ளார். இதையடுத்து போலீசார் பிரகாஷை வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். வழக்கு இந்த நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட 11 நாட்களுக்குள் 5 முறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment