FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, March 16, 2019

இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்

13.03.2019
சன் டிவி-யில் ஒளிபரப்பான 'கிச்சன் கலாட்டா' சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஃபரீனா ஆசாத். அதன் பிறகு, ஜி தமிழில் 'அஞ்சறைப் பெட்டி' என்கிற சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருபவருக்கு அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட். என்னன்னு கேட்கிறீர்களா..? நம்ம ஃபரீனா இப்போது கலர்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஷூட்டிங்கில் படு பிஸிங்க.

வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும், 'தறி' என்கிற சீரியலில் காதுகேளா, வாய்பேச முடியாத பெண்ணாக நடிக்கிறார். இதற்காக ,காதுகேளாத, வாய்ப்பேச முடியாத குழந்தைகள் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று, எப்படி சைன் லாங்குவேஜில் பேசுவது என பிராக்டீஸ் எடுக்கிறார்.

இந்த சீரியலில் நடித்த அனுபவம்குறித்து கேட்டபோது, 'காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியமான ஒன்று. அவர்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு. அதனால்தான் இந்த சீரியலில் நானும் காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கிறேன். அதனால், அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களுக்குச் சென்று, அதற்கான பயிற்சியைப் பெற்றுவருகிறேன். அவர்களுடைய உலகம் எப்படி இருக்கிறது என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. நிறையப் பேர், 'உங்களுக்கு சைன் லாங்குவேஜ் காட்டி நடிப்பது கஷ்டமாக இல்லையா' எனக் கேட்கிறார்கள். இல்லவே இல்லைனுதான் பதில் சொல்வேன். இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்' என்கிறார். 

'தறி' சீரியல், முழுக்க முழுக்க நெசவாளர்களின் கதையை மையமாகக் கொண்டதாம். புது முகங்களான சபரி மற்றும் ஶ்ரீ இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது... இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது இந்த சீரியல்.

No comments:

Post a Comment