FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, March 16, 2019

இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்

13.03.2019
சன் டிவி-யில் ஒளிபரப்பான 'கிச்சன் கலாட்டா' சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஃபரீனா ஆசாத். அதன் பிறகு, ஜி தமிழில் 'அஞ்சறைப் பெட்டி' என்கிற சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருபவருக்கு அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட். என்னன்னு கேட்கிறீர்களா..? நம்ம ஃபரீனா இப்போது கலர்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஷூட்டிங்கில் படு பிஸிங்க.

வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும், 'தறி' என்கிற சீரியலில் காதுகேளா, வாய்பேச முடியாத பெண்ணாக நடிக்கிறார். இதற்காக ,காதுகேளாத, வாய்ப்பேச முடியாத குழந்தைகள் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று, எப்படி சைன் லாங்குவேஜில் பேசுவது என பிராக்டீஸ் எடுக்கிறார்.

இந்த சீரியலில் நடித்த அனுபவம்குறித்து கேட்டபோது, 'காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியமான ஒன்று. அவர்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு. அதனால்தான் இந்த சீரியலில் நானும் காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கிறேன். அதனால், அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களுக்குச் சென்று, அதற்கான பயிற்சியைப் பெற்றுவருகிறேன். அவர்களுடைய உலகம் எப்படி இருக்கிறது என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. நிறையப் பேர், 'உங்களுக்கு சைன் லாங்குவேஜ் காட்டி நடிப்பது கஷ்டமாக இல்லையா' எனக் கேட்கிறார்கள். இல்லவே இல்லைனுதான் பதில் சொல்வேன். இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்' என்கிறார். 

'தறி' சீரியல், முழுக்க முழுக்க நெசவாளர்களின் கதையை மையமாகக் கொண்டதாம். புது முகங்களான சபரி மற்றும் ஶ்ரீ இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது... இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது இந்த சீரியல்.

No comments:

Post a Comment