FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, March 16, 2019

இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்

13.03.2019
சன் டிவி-யில் ஒளிபரப்பான 'கிச்சன் கலாட்டா' சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஃபரீனா ஆசாத். அதன் பிறகு, ஜி தமிழில் 'அஞ்சறைப் பெட்டி' என்கிற சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருபவருக்கு அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட். என்னன்னு கேட்கிறீர்களா..? நம்ம ஃபரீனா இப்போது கலர்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஷூட்டிங்கில் படு பிஸிங்க.

வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும், 'தறி' என்கிற சீரியலில் காதுகேளா, வாய்பேச முடியாத பெண்ணாக நடிக்கிறார். இதற்காக ,காதுகேளாத, வாய்ப்பேச முடியாத குழந்தைகள் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று, எப்படி சைன் லாங்குவேஜில் பேசுவது என பிராக்டீஸ் எடுக்கிறார்.

இந்த சீரியலில் நடித்த அனுபவம்குறித்து கேட்டபோது, 'காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியமான ஒன்று. அவர்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு. அதனால்தான் இந்த சீரியலில் நானும் காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கிறேன். அதனால், அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களுக்குச் சென்று, அதற்கான பயிற்சியைப் பெற்றுவருகிறேன். அவர்களுடைய உலகம் எப்படி இருக்கிறது என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. நிறையப் பேர், 'உங்களுக்கு சைன் லாங்குவேஜ் காட்டி நடிப்பது கஷ்டமாக இல்லையா' எனக் கேட்கிறார்கள். இல்லவே இல்லைனுதான் பதில் சொல்வேன். இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்' என்கிறார். 

'தறி' சீரியல், முழுக்க முழுக்க நெசவாளர்களின் கதையை மையமாகக் கொண்டதாம். புது முகங்களான சபரி மற்றும் ஶ்ரீ இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது... இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது இந்த சீரியல்.

No comments:

Post a Comment