FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, March 16, 2019

62 ஆண்டுகளாக காது கேளாதவராக நடித்த கணவர்

08.03.2019
வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போல் நடித்த கணவர் மீது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்தவர் பாரி டவ்சன் 84, இவர் மனைவி டோரத்தி 80. திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவியின் டார்ச்சர் தாங்காமல் காது கேளாதவர் போல் பாரி டவ்சன் நடிக்கத் துவங்கியுள்ளார். இப்படியே 62 ஆண்டுகளை நகர்த்தி விட்ட நிலையில், சமீபத்தில் யூடியூப் வீடியோவில், கரோக்கி இசையை கேட்டு தலையை ஆட்டியபடி பாரி டவ்சன் பாடியுள்ளது சமூக வலைத்தளத்தில் வெளியானது.

அதைப் பார்த்து குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் என்றாலும், அவர் மனைவியோ காது கேளாதவர் போல் நடித்து தம்மை ஏமாற்றியுள்ளாரே என நினைத்து கடுப்பாகி, விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார்.இத்தம்பதிக்கு 6 பிள்ளைகள். 13 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே பாரி டவ்சன்னை காது கேளாதவர் என்றே நினைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் மனைவி டோரத்தி கூறியது: வீட்டில் இருக்கும் போதெல்லாம் காது கேளாதவர் போன்றே இருப்பர். அவருடன் பேசுவதற்கு சைகைகளை பயன்படுத்த துவங்கினேன். பின், சரியாக தெரியவில்லை என்று என் சைகைகளையும் அலட்சியப்படுத்தினார். இப்போது தான் தெரிகிறது எல்லாமே ஏமாற்று வேலை என்று' என கடுகடுக்கிறார்.

ஆனால், டவ்சன் வழக்கறிஞர் ராபர்ட் கூறிய போது, 'டவ்சன், தன் மனைவியின் லொட லொட பேச்சு, சண்டையிலிருந்து தன் மனதையும், குடும்ப அமைதியையும் காப்பதற்காக, 62 ஆண்டுகளை தியாகம் செய்துள்ளார்' என்று வாதாடியுள்ளார்.

No comments:

Post a Comment