FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, March 16, 2019

62 ஆண்டுகளாக காது கேளாதவராக நடித்த கணவர்

08.03.2019
வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போல் நடித்த கணவர் மீது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்தவர் பாரி டவ்சன் 84, இவர் மனைவி டோரத்தி 80. திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவியின் டார்ச்சர் தாங்காமல் காது கேளாதவர் போல் பாரி டவ்சன் நடிக்கத் துவங்கியுள்ளார். இப்படியே 62 ஆண்டுகளை நகர்த்தி விட்ட நிலையில், சமீபத்தில் யூடியூப் வீடியோவில், கரோக்கி இசையை கேட்டு தலையை ஆட்டியபடி பாரி டவ்சன் பாடியுள்ளது சமூக வலைத்தளத்தில் வெளியானது.

அதைப் பார்த்து குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் என்றாலும், அவர் மனைவியோ காது கேளாதவர் போல் நடித்து தம்மை ஏமாற்றியுள்ளாரே என நினைத்து கடுப்பாகி, விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார்.இத்தம்பதிக்கு 6 பிள்ளைகள். 13 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே பாரி டவ்சன்னை காது கேளாதவர் என்றே நினைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் மனைவி டோரத்தி கூறியது: வீட்டில் இருக்கும் போதெல்லாம் காது கேளாதவர் போன்றே இருப்பர். அவருடன் பேசுவதற்கு சைகைகளை பயன்படுத்த துவங்கினேன். பின், சரியாக தெரியவில்லை என்று என் சைகைகளையும் அலட்சியப்படுத்தினார். இப்போது தான் தெரிகிறது எல்லாமே ஏமாற்று வேலை என்று' என கடுகடுக்கிறார்.

ஆனால், டவ்சன் வழக்கறிஞர் ராபர்ட் கூறிய போது, 'டவ்சன், தன் மனைவியின் லொட லொட பேச்சு, சண்டையிலிருந்து தன் மனதையும், குடும்ப அமைதியையும் காப்பதற்காக, 62 ஆண்டுகளை தியாகம் செய்துள்ளார்' என்று வாதாடியுள்ளார்.

No comments:

Post a Comment