FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, March 29, 2019

தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய செயலி

28.03.2019
சிவகங்கை,
சிவகங்கையில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாகவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கை உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் நடந்தது. சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாகரன், சமூகப்பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார்கள் தர்மராஜ், சேகர் மற்றும் தேர்தல் உதவியாளர் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தில் பார்வையற்ற, காது கேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் எளிதாக எவ்வாறு வாக்களிக்கலாம் என்பதையும், வாக்குச் சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள வசதிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் எளிதில் வாக்களிக்கக் கூடிய வகையில் பி.டபிள்யூ.டி. என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என பதிவு செய்யவும், புதிதாக வாக்காளர் சேர்க்கை, முகவரி மாற்றம் உள்ளிட்ட, திருத்தங்கள் செய்ய பதிவு செய்யலாம்.

வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பற்றியும், வாக்குச் சாவடிக்கு செல்ல சக்கர நாற்காலி வாகனம் பதிவு போன்றவற்றை தங்களிடம் உள்ள கைப்பேசி மூலமாகவே அனைத்தையும் செய்து கொள்ளலாம் என விளக்கி கூறப்பட்டது.

No comments:

Post a Comment