FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, March 29, 2019

தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய செயலி

28.03.2019
சிவகங்கை,
சிவகங்கையில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாகவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கை உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் நடந்தது. சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாகரன், சமூகப்பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார்கள் தர்மராஜ், சேகர் மற்றும் தேர்தல் உதவியாளர் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தில் பார்வையற்ற, காது கேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் எளிதாக எவ்வாறு வாக்களிக்கலாம் என்பதையும், வாக்குச் சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள வசதிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் எளிதில் வாக்களிக்கக் கூடிய வகையில் பி.டபிள்யூ.டி. என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என பதிவு செய்யவும், புதிதாக வாக்காளர் சேர்க்கை, முகவரி மாற்றம் உள்ளிட்ட, திருத்தங்கள் செய்ய பதிவு செய்யலாம்.

வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பற்றியும், வாக்குச் சாவடிக்கு செல்ல சக்கர நாற்காலி வாகனம் பதிவு போன்றவற்றை தங்களிடம் உள்ள கைப்பேசி மூலமாகவே அனைத்தையும் செய்து கொள்ளலாம் என விளக்கி கூறப்பட்டது.

No comments:

Post a Comment