FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, March 16, 2019

இலவச பயண சலுகை அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் ஒன்றிய வாரியாக 19–ந் தேதி முதல் சிறப்பு முகாம்

10.03.2019, திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பார்வையற்றோர், உடல் இயக்க குறைபாடு, காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆண்டு காலத்திற்கான இலவச பயண சலுகை அட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2019–20–ம் ஆண்டிற்கான இலவச பயண சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரசு பஸ்களில் மாவட்டம் முழுவதும் இலவசமாக பயணம் செய்யவும், உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தினந்தோறும் பயிற்சி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் இடத்தில் இருந்து பெறப்பட்ட சான்றுடன் விண்ணப்பிக்கலாம். இலவச பயண சலுகை அட்டை வழங்கிடுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 19–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 21–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 22–ந் தேதியும் முகாம் நடக்கிறது.

அதேபோல் உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு வருகிற 28–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 29–ந் தேதியும் நடைபெற உள்ளது.

மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment