FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, March 16, 2019

இலவச பயண சலுகை அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் ஒன்றிய வாரியாக 19–ந் தேதி முதல் சிறப்பு முகாம்

10.03.2019, திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பார்வையற்றோர், உடல் இயக்க குறைபாடு, காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆண்டு காலத்திற்கான இலவச பயண சலுகை அட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2019–20–ம் ஆண்டிற்கான இலவச பயண சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரசு பஸ்களில் மாவட்டம் முழுவதும் இலவசமாக பயணம் செய்யவும், உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தினந்தோறும் பயிற்சி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் இடத்தில் இருந்து பெறப்பட்ட சான்றுடன் விண்ணப்பிக்கலாம். இலவச பயண சலுகை அட்டை வழங்கிடுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 19–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 21–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 22–ந் தேதியும் முகாம் நடக்கிறது.

அதேபோல் உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு வருகிற 28–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 29–ந் தேதியும் நடைபெற உள்ளது.

மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment