FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, March 16, 2019

இலவச பயண சலுகை அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் ஒன்றிய வாரியாக 19–ந் தேதி முதல் சிறப்பு முகாம்

10.03.2019, திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பார்வையற்றோர், உடல் இயக்க குறைபாடு, காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆண்டு காலத்திற்கான இலவச பயண சலுகை அட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2019–20–ம் ஆண்டிற்கான இலவச பயண சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரசு பஸ்களில் மாவட்டம் முழுவதும் இலவசமாக பயணம் செய்யவும், உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தினந்தோறும் பயிற்சி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் இடத்தில் இருந்து பெறப்பட்ட சான்றுடன் விண்ணப்பிக்கலாம். இலவச பயண சலுகை அட்டை வழங்கிடுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 19–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 21–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 22–ந் தேதியும் முகாம் நடக்கிறது.

அதேபோல் உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு வருகிற 28–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 29–ந் தேதியும் நடைபெற உள்ளது.

மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment