FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, March 16, 2019

இலவச பயண சலுகை அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் ஒன்றிய வாரியாக 19–ந் தேதி முதல் சிறப்பு முகாம்

10.03.2019, திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பார்வையற்றோர், உடல் இயக்க குறைபாடு, காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆண்டு காலத்திற்கான இலவச பயண சலுகை அட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2019–20–ம் ஆண்டிற்கான இலவச பயண சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரசு பஸ்களில் மாவட்டம் முழுவதும் இலவசமாக பயணம் செய்யவும், உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தினந்தோறும் பயிற்சி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் இடத்தில் இருந்து பெறப்பட்ட சான்றுடன் விண்ணப்பிக்கலாம். இலவச பயண சலுகை அட்டை வழங்கிடுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 19–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 21–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 22–ந் தேதியும் முகாம் நடக்கிறது.

அதேபோல் உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு வருகிற 28–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 29–ந் தேதியும் நடைபெற உள்ளது.

மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment