FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, October 21, 2019

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

20.10.2019, புதுக்கோட்டை, 
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசின் மாநில விருதுகள், மாற்றுத்திறனாளிகள் தினமான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி சென்னையில் வழங்கப்படுகிறது. சிறந்த பணி யாளர், சுயதொழில் புரியும் கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் பார்வையற்றோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், சிறந்த சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பேச்சு மற்றும் மொழிதிறன் குறைபாடு, புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் குறிப்பிட்ட கற்றல் இயலாமை, மனநலம் பாதிக்கப்பட்டோர், ரத்த உறையாமை அல்லது ரத்த சோகை, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல் மற்றும் நடுக்குவாதம், பல்வகை ஊனம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டோருக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

விருதுகளை பெற புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று நாளைக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment