FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, October 21, 2019

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

20.10.2019, புதுக்கோட்டை, 
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசின் மாநில விருதுகள், மாற்றுத்திறனாளிகள் தினமான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி சென்னையில் வழங்கப்படுகிறது. சிறந்த பணி யாளர், சுயதொழில் புரியும் கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் பார்வையற்றோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், சிறந்த சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பேச்சு மற்றும் மொழிதிறன் குறைபாடு, புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் குறிப்பிட்ட கற்றல் இயலாமை, மனநலம் பாதிக்கப்பட்டோர், ரத்த உறையாமை அல்லது ரத்த சோகை, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல் மற்றும் நடுக்குவாதம், பல்வகை ஊனம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டோருக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

விருதுகளை பெற புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று நாளைக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment