FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, October 21, 2019

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

20.10.2019, புதுக்கோட்டை, 
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசின் மாநில விருதுகள், மாற்றுத்திறனாளிகள் தினமான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி சென்னையில் வழங்கப்படுகிறது. சிறந்த பணி யாளர், சுயதொழில் புரியும் கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் பார்வையற்றோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர், சிறந்த சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் செவிதிறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பேச்சு மற்றும் மொழிதிறன் குறைபாடு, புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் குறிப்பிட்ட கற்றல் இயலாமை, மனநலம் பாதிக்கப்பட்டோர், ரத்த உறையாமை அல்லது ரத்த சோகை, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன்முக கடினமாதல் மற்றும் நடுக்குவாதம், பல்வகை ஊனம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டோருக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

விருதுகளை பெற புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று நாளைக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment