FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, October 21, 2019

காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி ;சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.


19.10.2019, தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ; தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு அமைப்பு சென்னை, தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி துவக்க விழா இன்று (18.10.2019) நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். மேலும், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சங்கம் சார்பாக மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறுகின்ற பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் 16 மாவட்டங்களில் இருந்து காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத 200 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும், மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கேன்டீன் செயல்படுகிறது.நேற்று நான் பத்திரிக்கை செய்தி வாசித்த போது, 100 சதவீதம் கண் தெரியாத ஒருவர், இந்திய பணி தேர்வில் வெற்றி பெற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில், சார் ஆட்சியராக நேற்று பணி பொறுப்பேற்றுள்ளார் என்பதை அறிந்தேன். சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திறமைக்கு எதுவும் தடையில்லை என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ,தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.வி.பேட்ரிக், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் குமரேசன், தொழில் அதிபர் கே.பழனிவேல், நல்லாயன் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர், தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு அமைப்பு செயலாளர் மெய்கண்டன், தலைவர் காசிவேல் முருகன், உதவி தலைவர் சின்னதுரை, பொருளாளர் ஏ.போஸ்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment