FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, October 21, 2019

காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி ;சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.


19.10.2019, தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ; தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு அமைப்பு சென்னை, தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி துவக்க விழா இன்று (18.10.2019) நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். மேலும், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சங்கம் சார்பாக மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறுகின்ற பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் 16 மாவட்டங்களில் இருந்து காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத 200 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும், மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கேன்டீன் செயல்படுகிறது.நேற்று நான் பத்திரிக்கை செய்தி வாசித்த போது, 100 சதவீதம் கண் தெரியாத ஒருவர், இந்திய பணி தேர்வில் வெற்றி பெற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில், சார் ஆட்சியராக நேற்று பணி பொறுப்பேற்றுள்ளார் என்பதை அறிந்தேன். சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திறமைக்கு எதுவும் தடையில்லை என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ,தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.வி.பேட்ரிக், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் குமரேசன், தொழில் அதிபர் கே.பழனிவேல், நல்லாயன் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர், தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு அமைப்பு செயலாளர் மெய்கண்டன், தலைவர் காசிவேல் முருகன், உதவி தலைவர் சின்னதுரை, பொருளாளர் ஏ.போஸ்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment