FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, October 21, 2019

காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி ;சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.


19.10.2019, தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ; தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு அமைப்பு சென்னை, தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி துவக்க விழா இன்று (18.10.2019) நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். மேலும், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சங்கம் சார்பாக மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறுகின்ற பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் 16 மாவட்டங்களில் இருந்து காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத 200 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும், மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கேன்டீன் செயல்படுகிறது.நேற்று நான் பத்திரிக்கை செய்தி வாசித்த போது, 100 சதவீதம் கண் தெரியாத ஒருவர், இந்திய பணி தேர்வில் வெற்றி பெற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில், சார் ஆட்சியராக நேற்று பணி பொறுப்பேற்றுள்ளார் என்பதை அறிந்தேன். சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திறமைக்கு எதுவும் தடையில்லை என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ,தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.வி.பேட்ரிக், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் குமரேசன், தொழில் அதிபர் கே.பழனிவேல், நல்லாயன் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர், தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு அமைப்பு செயலாளர் மெய்கண்டன், தலைவர் காசிவேல் முருகன், உதவி தலைவர் சின்னதுரை, பொருளாளர் ஏ.போஸ்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment