FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 21, 2019

காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி ;சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.


19.10.2019, தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ; தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு அமைப்பு சென்னை, தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி துவக்க விழா இன்று (18.10.2019) நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். மேலும், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சங்கம் சார்பாக மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறுகின்ற பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் 16 மாவட்டங்களில் இருந்து காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத 200 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும், மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கேன்டீன் செயல்படுகிறது.நேற்று நான் பத்திரிக்கை செய்தி வாசித்த போது, 100 சதவீதம் கண் தெரியாத ஒருவர், இந்திய பணி தேர்வில் வெற்றி பெற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில், சார் ஆட்சியராக நேற்று பணி பொறுப்பேற்றுள்ளார் என்பதை அறிந்தேன். சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திறமைக்கு எதுவும் தடையில்லை என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ,தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.வி.பேட்ரிக், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் குமரேசன், தொழில் அதிபர் கே.பழனிவேல், நல்லாயன் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர், தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு அமைப்பு செயலாளர் மெய்கண்டன், தலைவர் காசிவேல் முருகன், உதவி தலைவர் சின்னதுரை, பொருளாளர் ஏ.போஸ்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment