FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, October 30, 2019

சிவகங்கையில் மூன்று ஆண்டுகளில் காது கேளாத 50 பேருக்கு அறுவை சிகிச்சை

20.10.2019
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிறவி காது கேளாத 50 குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தில் பிறவி காது கேளாத குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 50 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நேற்று 50 வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு டீன் குழந்தைவேலு தலைமை வகித்தார். இ.என்.டி., துறைத்தலைவர் டாக்டர் நாகசுப்ரமணியன் வரவேற்றார். மெட்ராஸ் இ.என்.டி., ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், உதவிப்பேராசிரியர் யோகநாத், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷீலா, பேராசிரியர் அழகு வடிவேல் நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் மீனா, டாக்டர் மிதின் குமார் பங்கேற்றனர்.50 அறுவை சிகிச்சையின் போது சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

டீன் குழந்தைவேலு கூறியதாவது: தமிழகத்திலேயே குறைந்த வயதாக, ஒரு வயது 7 நாட்கள் கொண்ட குழந்தைக்கு இங்கு தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கு பிறவி செவிதிறன் குறைபாடு குழந்தைகளை கண்டறிய நவீன பரிசோதனை கருவிகளும், அதற்கான சிறப்பு அறையும் உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒன்றரை வருடம் சிறப்பு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இங்கு தான் இச்சிகிச்சை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது, என்றார். தொடர்ந்து 50 வது அறுவை சிகிச்சை நினைவாக கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

No comments:

Post a Comment