FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 30, 2019

சிவகங்கையில் மூன்று ஆண்டுகளில் காது கேளாத 50 பேருக்கு அறுவை சிகிச்சை

20.10.2019
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிறவி காது கேளாத 50 குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தில் பிறவி காது கேளாத குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 50 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நேற்று 50 வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு டீன் குழந்தைவேலு தலைமை வகித்தார். இ.என்.டி., துறைத்தலைவர் டாக்டர் நாகசுப்ரமணியன் வரவேற்றார். மெட்ராஸ் இ.என்.டி., ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், உதவிப்பேராசிரியர் யோகநாத், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷீலா, பேராசிரியர் அழகு வடிவேல் நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் மீனா, டாக்டர் மிதின் குமார் பங்கேற்றனர்.50 அறுவை சிகிச்சையின் போது சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

டீன் குழந்தைவேலு கூறியதாவது: தமிழகத்திலேயே குறைந்த வயதாக, ஒரு வயது 7 நாட்கள் கொண்ட குழந்தைக்கு இங்கு தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கு பிறவி செவிதிறன் குறைபாடு குழந்தைகளை கண்டறிய நவீன பரிசோதனை கருவிகளும், அதற்கான சிறப்பு அறையும் உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒன்றரை வருடம் சிறப்பு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இங்கு தான் இச்சிகிச்சை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது, என்றார். தொடர்ந்து 50 வது அறுவை சிகிச்சை நினைவாக கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

No comments:

Post a Comment