FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, October 30, 2019

சிவகங்கையில் மூன்று ஆண்டுகளில் காது கேளாத 50 பேருக்கு அறுவை சிகிச்சை

20.10.2019
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிறவி காது கேளாத 50 குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தில் பிறவி காது கேளாத குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 50 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நேற்று 50 வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு டீன் குழந்தைவேலு தலைமை வகித்தார். இ.என்.டி., துறைத்தலைவர் டாக்டர் நாகசுப்ரமணியன் வரவேற்றார். மெட்ராஸ் இ.என்.டி., ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், உதவிப்பேராசிரியர் யோகநாத், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷீலா, பேராசிரியர் அழகு வடிவேல் நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் மீனா, டாக்டர் மிதின் குமார் பங்கேற்றனர்.50 அறுவை சிகிச்சையின் போது சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

டீன் குழந்தைவேலு கூறியதாவது: தமிழகத்திலேயே குறைந்த வயதாக, ஒரு வயது 7 நாட்கள் கொண்ட குழந்தைக்கு இங்கு தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கு பிறவி செவிதிறன் குறைபாடு குழந்தைகளை கண்டறிய நவீன பரிசோதனை கருவிகளும், அதற்கான சிறப்பு அறையும் உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒன்றரை வருடம் சிறப்பு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இங்கு தான் இச்சிகிச்சை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது, என்றார். தொடர்ந்து 50 வது அறுவை சிகிச்சை நினைவாக கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

No comments:

Post a Comment