FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, October 15, 2019

வயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…

25.09.2019
திருவாரூர் மாவட்டத்தில் வயிற்று வலியால் துடித்த மாற்றுத்திறனாளி பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததால் அப்பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் அப்பரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் தம்பதிக்கு ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (25) என்ற வாய் பேச முடியாத காது கேட்காத ஒரு மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். ரேகா தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதற்கு யார் காரணம் என்பது குறித்து ரேகாவிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து ரேகா சொல்ல முடியாத நிலையில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பல நாட்கள் கேட்ட போதும் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்த ரேகா பெற்றோர்களிடம் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து ரேகா பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment