FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, October 21, 2019

பள்ளி மாணவர்களின் மனதில் உள்ள சாதி வெறி ! மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடுமையாக தாக்கியுள்ளான்


20.10.2019 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஆதி என்ற மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடந்த 17-10-2019-ந்தேதி மாலை நேரத்தில் பள்ளியில் கடுமையாக தாக்கியுள்ளான். பள்ளி முடிந்து வெளியே வந்த சுரேந்தரை ஆதி மற்றும் அவருடைய அண்ணன் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிப்பவர் மற்றும் ஆதியின் உறவினர் கலைமணி ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தாக்குதலுக்கு சுரேந்திரன் மாணவனின் சித்தப்பாவிடம் கலைமணி என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன் மகனை அடித்து சக்கராபாளையத்தில் எரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேற்படி மாணவன் சுரேந்தர் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் 4-நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தகவல் அறிந்து தாக்குதலுக்கு ஆளான மாணவன் சுரேந்திர் அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வழக்கு பதிவு செய்ய தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment