
09.06.2025
தமிழகத்தில் பொதுவாக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் கைப்பந்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் 2025 எனும் போட்டி பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் மற்றும் கோவை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜூனியர், சீனியர் என தனித்தனி அணிகளாக நடைபெற்றது.இந்த போட்டியில் சென்னை கோவை, திருப்பூர்.மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றனர்.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற கைப்பந்து இறுதி போட்டியில் சென்னை அணி முதல் இடத்தையும், கோவை அணி இரண்டாம் இடத்தையும், திருப்பூர் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் ஜூலை 9ஆம் தேதி ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் நடைபெற உள்ள காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment