FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, June 9, 2025

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆணிகள் பங்கேற்று விளையாடினர்..




09.06.2025
தமிழகத்தில் பொதுவாக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் கைப்பந்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் 2025 எனும் போட்டி பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் மற்றும் கோவை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜூனியர், சீனியர் என தனித்தனி அணிகளாக நடைபெற்றது.இந்த போட்டியில் சென்னை கோவை, திருப்பூர்.மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றனர்.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற கைப்பந்து இறுதி போட்டியில் சென்னை அணி முதல் இடத்தையும், கோவை அணி இரண்டாம் இடத்தையும், திருப்பூர் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்த மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் ஜூலை 9ஆம் தேதி ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் நடைபெற உள்ள காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment