FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, June 9, 2025

காதுகேளாதோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்



09.06.2025
விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. பலவீனமாக சுவர்கள் விழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

சூலக்கரையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுச்சுவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமாகி மழைக்காலத்தில் சிறுபகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து பலவீனமாக இருந்த அடுத்தடுத்த சுற்றுச்சுவர்களும் சில நாட்களில் இடிந்தது.

தற்போது மற்ற சுவர்களும் பலவீனமாகவே உள்ளது. இதுவரை இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்கள் பகுதிகளில் புதிதாக சுவர் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி வளாகத்தில் விஷப்பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒரு மாதம் கோடை விடுமுறை விட்டு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் அச்சத்துடன் வளாகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வலுவிழந்த சுவர்கள் மாணவர்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை உயர்அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


No comments:

Post a Comment