FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, June 9, 2025

காதுகேளாதோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்



09.06.2025
விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. பலவீனமாக சுவர்கள் விழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

சூலக்கரையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுச்சுவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமாகி மழைக்காலத்தில் சிறுபகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து பலவீனமாக இருந்த அடுத்தடுத்த சுற்றுச்சுவர்களும் சில நாட்களில் இடிந்தது.

தற்போது மற்ற சுவர்களும் பலவீனமாகவே உள்ளது. இதுவரை இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்கள் பகுதிகளில் புதிதாக சுவர் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி வளாகத்தில் விஷப்பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒரு மாதம் கோடை விடுமுறை விட்டு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் அச்சத்துடன் வளாகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வலுவிழந்த சுவர்கள் மாணவர்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை உயர்அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


No comments:

Post a Comment