FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, June 18, 2025

திருச்சி செவித் திறன் மாற்று திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் தனது பேனாவை வழங்கி பாராட்டு

கிளாட்’ தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவி ராகிணிக்கு சால்வை அணிவித்து, தனது பேனாவை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

17.06.2025
திருச்சி: ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார். திருச்சி பெரிய மிளகுப்பாறை பண்டாரத்தெருவைச் சேர்ந்த தயாளன் மகள் ராகிணி. செவித் திறன் மாற்றுத்திறனாளியான ராகிணி, அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.

ரூ.55 ஆயிரம் மதிப்புடைய பேனா: இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரிய மிளகுப்பாறை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் அந்த மாணவி ராகிணியை சந்தித்து, பொன்னாடை போர்த்தி, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தனது பேனாவை பரிசளித்து பாராட்டி, வாழ்த்து கூறினார்.

இதுகுறித்து மாணவி ராகிணி கூறியதாவது: எனது தாய் சிறுவயதிலேயே என்னை விட்டு பிரிந்து சென்றார். எனது தந்தை, பாட்டி, அத்தை ஆகியோர்தான் என்னை வளர்த்தனர். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ‘கிளாட்’ தேர்வு குறித்து அறிந்து, அந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றேன். இந்த வெற்றிக்கு எனது குடும்பத்தினர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்தான் காரணம்.தேசிய சட்டப்பல்கலையில் சேர்ந்த எனக்கு முதல்வர் ஸ்டாலின், தனது பேனாவை பரிசளித்து பாராட்டியது நெகிழ்ச்சியான தருணம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின், அதே பகுதியில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக நகரச் செயலாளர் கே.கே.எம்.தங்கராசு இல்லத்துக்குச் சென்று, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. திருச்சி சிவா, மேயர் மு.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் விமான நிலையம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிற்பகலில் சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.


No comments:

Post a Comment