இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
உபகரணங்கள் பற்றிய கண்காட்சி ஜூன் 12, 13 அதாவது, இன்றும் நாளையும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம். கட்டணமில்லை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் எஸ்.மதுமதி, கண்காட்சியைத் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்டு வரும் பாரம்பரிய உதவி உபகரணங்களைத் தவிர, தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் கூடிய புதிய நவீன உதவி உபகரணங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியாகும் இது.

இந்தக் கண்காட்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12.06.2025 (வியாழக்கிழமை) மற்றும் 13.06.2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும். இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்வாதாரம் அன்றாடம் சகஜமாக நடைபெற, அவர்கள் அன்றாட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை உட்பட இயல்பாக நடைபெற உதவும் புதிய நவீன உபகரணங்கள் அவர்களுக்காக இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் கண்காட்சி உதவிகரமாக இருக்கும். கண்காட்சியில் பங்கேற்றுப் பார்வையிட http://www.medicall.in/medical-exibition-registration-online.php என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment