FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, June 13, 2025

Tech4all 2025: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் புதிய நவீன உபகரணக் கண்காட்சி ஜூன் 12, 13 சென்னையில்!



இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

உபகரணங்கள் பற்றிய கண்காட்சி ஜூன் 12, 13 அதாவது, இன்றும் நாளையும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம். கட்டணமில்லை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் எஸ்.மதுமதி, கண்காட்சியைத் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்டு வரும் பாரம்பரிய உதவி உபகரணங்களைத் தவிர, தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் கூடிய புதிய நவீன உதவி உபகரணங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியாகும் இது.


இந்தக் கண்காட்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12.06.2025 (வியாழக்கிழமை) மற்றும் 13.06.2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும். இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்வாதாரம் அன்றாடம் சகஜமாக நடைபெற, அவர்கள் அன்றாட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை உட்பட இயல்பாக நடைபெற உதவும் புதிய நவீன உபகரணங்கள் அவர்களுக்காக இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் கண்காட்சி உதவிகரமாக இருக்கும். கண்காட்சியில் பங்கேற்றுப் பார்வையிட http://www.medicall.in/medical-exibition-registration-online.php என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment