FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, June 13, 2025

Tech4all 2025: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் புதிய நவீன உபகரணக் கண்காட்சி ஜூன் 12, 13 சென்னையில்!



இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

உபகரணங்கள் பற்றிய கண்காட்சி ஜூன் 12, 13 அதாவது, இன்றும் நாளையும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம். கட்டணமில்லை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் எஸ்.மதுமதி, கண்காட்சியைத் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்டு வரும் பாரம்பரிய உதவி உபகரணங்களைத் தவிர, தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் கூடிய புதிய நவீன உதவி உபகரணங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியாகும் இது.


இந்தக் கண்காட்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12.06.2025 (வியாழக்கிழமை) மற்றும் 13.06.2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும். இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்வாதாரம் அன்றாடம் சகஜமாக நடைபெற, அவர்கள் அன்றாட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை உட்பட இயல்பாக நடைபெற உதவும் புதிய நவீன உபகரணங்கள் அவர்களுக்காக இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் கண்காட்சி உதவிகரமாக இருக்கும். கண்காட்சியில் பங்கேற்றுப் பார்வையிட http://www.medicall.in/medical-exibition-registration-online.php என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment