FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, June 17, 2025

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025 - 2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!





வேலூர், ஜூன்.16-

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வா கிகள் பதவி ஏற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா வேலூர் பில்டர்பெட் ரோட்டில் உள்ள ஆசிரியர் இல்ல கலையரங்கில் நடைபெற்றது விழாவிற்கு வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சரவணன் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் துணை சேர்மன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாநிலத் தலைவராக ஸி.பழனிசாமி துணைத் தலைவராக சிக்கந்தர் மற்றும் பொதுச் செயலாளராக நி ஜெய்சங்கர் பொருளாளராக டென்சிங் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒருவர் செயற்குழு உறுப்பினராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர் இக்கூட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 4% இட ஒதுக்கீடு இன் படி வேலை வழங்குவது உள்ளிட்ட 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவாக . வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றியுரையாற்றினார்.



No comments:

Post a Comment