FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, June 17, 2025

'ஹியரிங் எய்ட்' கேட்டு காத்திருப்போர் அதிகரிப்பு; இரண்டு ஆண்டாக தராததால் ஏராளமானோர் அவதி



17.06.2025
தமிழகத்தில் காது கேளாத குறைபாட்டுடன் இருப்போர், 'ஹியரிங் எய்ட்' கருவிக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவி கொடுப்பதால், பயன்படுத்துவோருக்கு பெரியளவில் பயன் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பிறவிக் கோளாறு, அதிக இரைச்சல், முதுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்நாட்டில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் காது கேளாமை குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, காது கேளாதோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்தும் வருகிறது. காதுகேளாமையால் பாதிக்கப்படுவோருக்கு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில், இலவச ஹியரிங் எய்ட் வாங்கப்பட்டு, காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ள அரசு மருத்துவமனைகள் வாயிலாக தரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு மருத்துவமனைகளுக்கு, இக்கருவியை மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து தரவில்லை. அதனால், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், குறைந்தது 200 பேர், 'ஹியரிங் எய்ட்' கேட்டு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

அதிகபட்சமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 600 பேர் பதிவு செய்து, இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இது குறித்து, ராஜிவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கும், கருவியை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளுக்கு, 'ஹியரிங் எய்ட்' வழங்கப்படவில்லை.

அதனால், இக்கருவி கேட்டு பதிவு செய்து காத்திருப்போருக்கு கொடுக்க முடியவில்லை. அவர்கள் கருவி எப்போது கிடைக்கும் என, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று கேட்டு வருகின்றனர்.

நாங்கள் இரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, 50 ஹியரிங் எய்ட் வழங்கப்பட்டது. இவற்றை யாருக்கு பொருத்துவது என்ற குழப்பமும் உள்ளது.

ஒரே விதமான கருவி

ஒரு கருவியின் விலை 4,500 ரூபாய். அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவியே வழங்கப்படுகிறது. உதாரணமாக, 60 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர், 80 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர் என அனைவருக்கும் ஒரே விதமான கருவி தான் வழங்கப்படுகிறது.

இவற்றால், பலருக்கு பயனில்லை. எனவே, நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்ப, ஹியரிங் எய்ட் வழங்கினால், ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment