FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, June 17, 2025

'ஹியரிங் எய்ட்' கேட்டு காத்திருப்போர் அதிகரிப்பு; இரண்டு ஆண்டாக தராததால் ஏராளமானோர் அவதி



17.06.2025
தமிழகத்தில் காது கேளாத குறைபாட்டுடன் இருப்போர், 'ஹியரிங் எய்ட்' கருவிக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவி கொடுப்பதால், பயன்படுத்துவோருக்கு பெரியளவில் பயன் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பிறவிக் கோளாறு, அதிக இரைச்சல், முதுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்நாட்டில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் காது கேளாமை குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, காது கேளாதோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்தும் வருகிறது. காதுகேளாமையால் பாதிக்கப்படுவோருக்கு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில், இலவச ஹியரிங் எய்ட் வாங்கப்பட்டு, காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ள அரசு மருத்துவமனைகள் வாயிலாக தரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு மருத்துவமனைகளுக்கு, இக்கருவியை மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து தரவில்லை. அதனால், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், குறைந்தது 200 பேர், 'ஹியரிங் எய்ட்' கேட்டு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

அதிகபட்சமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 600 பேர் பதிவு செய்து, இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இது குறித்து, ராஜிவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கும், கருவியை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளுக்கு, 'ஹியரிங் எய்ட்' வழங்கப்படவில்லை.

அதனால், இக்கருவி கேட்டு பதிவு செய்து காத்திருப்போருக்கு கொடுக்க முடியவில்லை. அவர்கள் கருவி எப்போது கிடைக்கும் என, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று கேட்டு வருகின்றனர்.

நாங்கள் இரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, 50 ஹியரிங் எய்ட் வழங்கப்பட்டது. இவற்றை யாருக்கு பொருத்துவது என்ற குழப்பமும் உள்ளது.

ஒரே விதமான கருவி

ஒரு கருவியின் விலை 4,500 ரூபாய். அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவியே வழங்கப்படுகிறது. உதாரணமாக, 60 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர், 80 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர் என அனைவருக்கும் ஒரே விதமான கருவி தான் வழங்கப்படுகிறது.

இவற்றால், பலருக்கு பயனில்லை. எனவே, நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்ப, ஹியரிங் எய்ட் வழங்கினால், ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment