FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, June 17, 2025

'ஹியரிங் எய்ட்' கேட்டு காத்திருப்போர் அதிகரிப்பு; இரண்டு ஆண்டாக தராததால் ஏராளமானோர் அவதி



17.06.2025
தமிழகத்தில் காது கேளாத குறைபாட்டுடன் இருப்போர், 'ஹியரிங் எய்ட்' கருவிக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவி கொடுப்பதால், பயன்படுத்துவோருக்கு பெரியளவில் பயன் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பிறவிக் கோளாறு, அதிக இரைச்சல், முதுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்நாட்டில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் காது கேளாமை குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, காது கேளாதோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்தும் வருகிறது. காதுகேளாமையால் பாதிக்கப்படுவோருக்கு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில், இலவச ஹியரிங் எய்ட் வாங்கப்பட்டு, காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ள அரசு மருத்துவமனைகள் வாயிலாக தரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு மருத்துவமனைகளுக்கு, இக்கருவியை மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து தரவில்லை. அதனால், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், குறைந்தது 200 பேர், 'ஹியரிங் எய்ட்' கேட்டு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

அதிகபட்சமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 600 பேர் பதிவு செய்து, இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இது குறித்து, ராஜிவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கும், கருவியை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளுக்கு, 'ஹியரிங் எய்ட்' வழங்கப்படவில்லை.

அதனால், இக்கருவி கேட்டு பதிவு செய்து காத்திருப்போருக்கு கொடுக்க முடியவில்லை. அவர்கள் கருவி எப்போது கிடைக்கும் என, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று கேட்டு வருகின்றனர்.

நாங்கள் இரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, 50 ஹியரிங் எய்ட் வழங்கப்பட்டது. இவற்றை யாருக்கு பொருத்துவது என்ற குழப்பமும் உள்ளது.

ஒரே விதமான கருவி

ஒரு கருவியின் விலை 4,500 ரூபாய். அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவியே வழங்கப்படுகிறது. உதாரணமாக, 60 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர், 80 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர் என அனைவருக்கும் ஒரே விதமான கருவி தான் வழங்கப்படுகிறது.

இவற்றால், பலருக்கு பயனில்லை. எனவே, நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்ப, ஹியரிங் எய்ட் வழங்கினால், ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment