FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, August 6, 2025

2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர்களுக்கு காது கேளாமை பிரச்சனை: எச்சரிக்கும் WHO - தப்பிப்பது எப்படி? - HEARING LOSS SYMPTOMS



காது கேட்கும் திறன் குறைந்து வருவதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காதது தான் பாதிப்பை அதிகரிக்க செய்யும்.

2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர் காது கேளாமை பிரச்சனைக்கு ஆளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. உலகளவில் அமைதியாக அச்சுறுத்தும் உடல்நல பாத்திப்புகளுள் ஒன்றாக காது கேளாமை (DEAFNESS AND HEARING LOSS ) பிரச்சனை உருவெடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகளவில் 160 கோடி நபர் காது கேளாமை பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் 10 பேரில் ஒருவருக்கு காது கேட்கும் திறனில் பிரச்சனை இருப்பதாகவும் WHO வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காது கேளாமல் என்றால்? காது கேட்கும் திறன் இழப்பு என்பது ஒலியின் வீரியத்தை அளவிடும் அலகான டெசிபல் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இயல்பாக கேட்கும் திறன் இரண்டு காதுகளிலும் 20 டெசிபல் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். நான்கு முதல் ஐந்து பேர் கூடி இருக்கும் இடத்தில் ஒருவர் தவிர மற்றவர்களுக்கு பிறர் பேசுவது நன்றாக கேட்கும் நிலை இருந்தால் அந்த நபர் காது கேட்கும் திறனை இழந்து கொண்டிருப்பதாக கணக்கிடப்படும். அவர் பிறர் பேசுவதை புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப லேசானது முதல் கடுமையானது வரை காது கேட்கும் திறனின் குறைபாடு அளவிடப்படும்.



அறிகுறிகள் என்னென்ன? ஒரே நாளில் செவித்திறன் இழப்பு ஏற்படுவதில்லை. காது கேட்கும் திறன் குறைந்து வருவதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காதது தான் பாதிப்பை அதிகரிக்க செய்யும். ஆனால், இதனை கூர்ந்து கவனிப்பது கடினமான விஷயமாக இருக்கலாம். இப்படியிருக்க, காது கேளாமையின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  • அமைதியான சூழலில் கூட பிறர் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல்
  • அருகில் இருந்தே ஒருவர் பேசினாலும், அவர் சொன்ன வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கேட்பது
  • வார்த்தையை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவது.
இது போன்ற அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால், அதனை சாதரணமாக கடந்து செல்லாமல் உகந்த சிகிச்சை அளிக்க வேண்டும். கிட்டத்தட்ட 60% காது கேளாமல் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் என்கிறது ஆய்வு.

காது கேளாமை ஏற்படக் காரணம்?:
  • அதிக சத்தம்
  • ஹெட்போன் அதிக நேரம் பயன்படுத்துவது
  • நகரப்பகுதியில் நீடிக்கும் இரைச்சல்
  • போக்குவரத்து
  • கட்டுமானம்
  • பொது இடங்களில் எழும் சத்தம்
  • இசை நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் அதீத சத்தம் போன்றவை காதுகளை அழுத்தத்திற்கு ஆளாக்கி காது கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இளைஞர்களுக்கு ஆபத்து? WHO தரவுகளின் படி, 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் காது கேளாமைக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது காதுகளை பரிசோதனை செய்வது அவசியமாக அமைகிறது.


No comments:

Post a Comment