FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, August 27, 2025

செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டி; மலேசியாவுக்கு முதல் தங்கம்



ஜகார்த்தா, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) - 2025 செவித்திறன் குறைபாடு

கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.

ஜகார்த்தாவின் ரகுனான்மாணவர் விளையாட்டு பயிற்சி மையம் PPOP-இல் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாட்டின் தேசிய திடல்தட வீரர் அஸ்லான் குஸ்தே மலேசியாவுக்கான அந்த முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அஸ்லான் தங்கம் வென்றுள்ளார்.

2022 கோலாலம்பூர் போட்டியின்போது வெற்றியாளராக வாகை சூடிய அவர், இம்முறை 2 நிமிடங்கள் 03.97 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து நடப்பு வெற்றியாளர் பட்டத்தை தற்காத்துக்கொண்டுள்ளார்.

இரண்டாம் இடத்தை 2 நிமிடங்கள் 05.21 வினாடிகளில் முடித்து சக வீரரான ஐடில் ஏ. அஷ்ரஃப் ஜுவாக்கிம் மலேசியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

அதேவேளையில், மூன்றாம் இடத்தை பிடித்த புரூணையின் முஹமட் அமிருடின் முஹமட் சைன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இவ்வாண்டின், செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.



No comments:

Post a Comment