FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, August 27, 2025

செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டி; மலேசியாவுக்கு முதல் தங்கம்



ஜகார்த்தா, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) - 2025 செவித்திறன் குறைபாடு

கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.

ஜகார்த்தாவின் ரகுனான்மாணவர் விளையாட்டு பயிற்சி மையம் PPOP-இல் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாட்டின் தேசிய திடல்தட வீரர் அஸ்லான் குஸ்தே மலேசியாவுக்கான அந்த முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அஸ்லான் தங்கம் வென்றுள்ளார்.

2022 கோலாலம்பூர் போட்டியின்போது வெற்றியாளராக வாகை சூடிய அவர், இம்முறை 2 நிமிடங்கள் 03.97 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து நடப்பு வெற்றியாளர் பட்டத்தை தற்காத்துக்கொண்டுள்ளார்.

இரண்டாம் இடத்தை 2 நிமிடங்கள் 05.21 வினாடிகளில் முடித்து சக வீரரான ஐடில் ஏ. அஷ்ரஃப் ஜுவாக்கிம் மலேசியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

அதேவேளையில், மூன்றாம் இடத்தை பிடித்த புரூணையின் முஹமட் அமிருடின் முஹமட் சைன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இவ்வாண்டின், செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.



No comments:

Post a Comment