FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, August 27, 2025

செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டி; மலேசியாவுக்கு முதல் தங்கம்



ஜகார்த்தா, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) - 2025 செவித்திறன் குறைபாடு

கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.

ஜகார்த்தாவின் ரகுனான்மாணவர் விளையாட்டு பயிற்சி மையம் PPOP-இல் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாட்டின் தேசிய திடல்தட வீரர் அஸ்லான் குஸ்தே மலேசியாவுக்கான அந்த முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அஸ்லான் தங்கம் வென்றுள்ளார்.

2022 கோலாலம்பூர் போட்டியின்போது வெற்றியாளராக வாகை சூடிய அவர், இம்முறை 2 நிமிடங்கள் 03.97 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து நடப்பு வெற்றியாளர் பட்டத்தை தற்காத்துக்கொண்டுள்ளார்.

இரண்டாம் இடத்தை 2 நிமிடங்கள் 05.21 வினாடிகளில் முடித்து சக வீரரான ஐடில் ஏ. அஷ்ரஃப் ஜுவாக்கிம் மலேசியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

அதேவேளையில், மூன்றாம் இடத்தை பிடித்த புரூணையின் முஹமட் அமிருடின் முஹமட் சைன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இவ்வாண்டின், செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.



No comments:

Post a Comment