FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, August 27, 2025

இறைவனை வணங்க தடை ஏது? விநாயகரை 'சைகை' மொழியில் வணங்கும் இளைஞர்கள்!

காது கேளாத, வாய் பேச முடியாத இளைஞர்கள்
விநாயகர் சிலை தயாரிக்கும் மாற்றுத் திறனாளிகள்

26.08.2025 
இயற்கை தங்களை உடல் அளவில் சோதித்திருந்தாலும், மனதளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறார்கள் இந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர்கள்.

கட்டாக், ஓடிசா: நான்கு இளைஞர்கள் விநாயகர் சிலை முன்பு சைகை மொழியில் பேசுகிறார்கள். சற்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது? என்பதை யூகிக்க சற்று தாமதமாகலாம். ஆனால், அருகே சென்று அவர்களை உற்று நோக்கினால் மட்டுமே அவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

யார் இவர்கள்? ஏன் அங்கே குழுமியிருக்கிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை அறிய அவர்களுடன் பயணத்தால் பல்வேறு ஆச்சரியமான செய்திகளை சுவாரசியமாக அவர்களது சைகை மொழியிலேயே கூறுகிறார்கள் அந்த இளைஞர்கள்.

இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், யாருடைய கொண்டாட்டத்திற்கும் சிறிதும் குறைவில்லாமல் இந்த காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டி மகிழ்கின்றனர். பல தசாப்தங்களாக விநாயகர் சதுர்த்தி விழா கட்டாக் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாற்றுத்திறனாளிகள் இணைந்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

மேலும், சிலையை செதுக்குவது முதல் பூஜை, அலங்காரங்கள் மற்றும் பிரசாதம் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட அனைத்தையுமே இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தே கவனிக்கிறார்கள்.

இது தொடர்பாக காது கேளாதவரும், கட்டாக் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவருமான கிருஷ்ணா நாயக் கூறும் போது, "கடந்த காலங்களில் எங்களுக்கு பிடித்த மாதிரி சிலைகள் வேண்டும் என்பதை, விநாயகர் சிலை தயாரிக்கும் சிற்பிகளுக்கு விளக்குவதே பெரிய சவாலாக இருந்தது. இந்த தொடர்பு தடைகளை எவ்வாறு நீக்க முடியும் என்பதை யோசித்தோம். ஏனென்றால், அவர்களால் சைகை மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் தவறாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எங்களுக்கு கொடுத்தார்கள்.

அதனால் நாங்களே சிலைகளை தயாரிக்க ஆரம்பித்தோம். எங்களில் சிலர் யூ டியூப் பார்த்து சிலைகளை உருவாக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டனர். விநாயகர் சிலை தயாரிப்புக்களை பொதுவாக இரண்டு மாதத்திற்கு முன்பே நாங்கள் ஆரம்பித்து விடுவோம். எனென்றால், பெரும்பாலானவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியில் உள்ளனர். இதனால், இந்த சிலை தயாரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அவர்களால் வேலை முடிந்து மாலை நேரம் அல்லது விடுமுறை நாள்களில் மட்டுமே வர முடியும்.

சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து இந்த சிலை தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். தங்களுக்கு தேவையான களிமண், வைக்கோல், நிதி என அனைத்தையும் ஒன்றாக அமர்ந்து பேசி மிக எளிதாக நடைமுறைப்படுத்துகிறார்கள். மேலும், எங்கள் தேவைகளை கடைக்காரர்கள் புரியும் மொழியில் தெரிவிக்க வேண்டும். பொருட்கள் வாங்கப் போகும் போது ஆரம்பத்தில் சற்று சிரமம் இருந்தது. தற்போது எங்கள் தேவைகளை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் கொண்டாட்டங்களில் உள்ளூர்வாசிகளும் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள்" என்றார்.

எங்கள் கொண்டாட்டங்கள் மற்றவர்களுக்கு அசாதாரணமாக தோன்றலாம். ஆனால், எங்களுக்கு அது மகிழ்ச்சியை தருகிறது. இந்த பூஜை எங்களுக்கானதாக உணர்கிறோம். அதனால், ஆர்வமுடன் பங்கேற்று இறைவன் அருள் பெறுகிறோம் என்கிறார் சங்கத்தின் செயலாளர் அபி மொஹந்தி.

இயற்கை உடல் அளவில் சோதித்திருந்தாலும், மனதளவில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இவர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


No comments:

Post a Comment