FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, August 27, 2025

உ.பி.யில் அவலம்: கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் தற்கொலை



21.08.2025 
காசியாபாத்,

உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் மாவட்டத்தில் 23 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 18-ந்தேதி கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது.

இதில் பலத்த பாதிப்படைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை நிறைவடைந்து அவர் நேற்றிரவு ஊருக்கு திரும்பினார்.

அப்போது அவர், லோனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில், வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இதுபற்றி டி.சி.பி. சுரேந்திர நாத் திவாரி கூறும்போது. கம்பளி விற்கும் நபரின் மகளான அவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என அவருடைய தந்தை புகார் தெரிவித்து உள்ளார். இதன்பேரில் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சம்பவம் தொடர்ச்சியாக ரோகித் (வயது 23) மற்றும் போலா (வயது 45) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய 3-வது குற்றவாளியை பிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லோனி காவல் நிலையத்திற்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு ஆர்வலர்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அவர்களிடம் உறுதியளித்தனர்.

கடந்த 14-ந்தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், மாமா வீட்டுக்கு சென்று விட்டு திரும்பினார்.

அப்போது, இரவில் அவரை 5 பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் பின்னர் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது. அதற்கடுத்த 4 நாட்களில் நடந்த இந்த சம்பவத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




No comments:

Post a Comment