FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, August 27, 2025

உ.பி.யில் அவலம்: கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் தற்கொலை



21.08.2025 
காசியாபாத்,

உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் மாவட்டத்தில் 23 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 18-ந்தேதி கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது.

இதில் பலத்த பாதிப்படைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை நிறைவடைந்து அவர் நேற்றிரவு ஊருக்கு திரும்பினார்.

அப்போது அவர், லோனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில், வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இதுபற்றி டி.சி.பி. சுரேந்திர நாத் திவாரி கூறும்போது. கம்பளி விற்கும் நபரின் மகளான அவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என அவருடைய தந்தை புகார் தெரிவித்து உள்ளார். இதன்பேரில் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சம்பவம் தொடர்ச்சியாக ரோகித் (வயது 23) மற்றும் போலா (வயது 45) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய 3-வது குற்றவாளியை பிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லோனி காவல் நிலையத்திற்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு ஆர்வலர்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அவர்களிடம் உறுதியளித்தனர்.

கடந்த 14-ந்தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், மாமா வீட்டுக்கு சென்று விட்டு திரும்பினார்.

அப்போது, இரவில் அவரை 5 பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் பின்னர் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது. அதற்கடுத்த 4 நாட்களில் நடந்த இந்த சம்பவத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




No comments:

Post a Comment