FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, August 21, 2025

கென்யாவில் காது கேளாதோருக்கான புதிய செயலி ஏ.அய். மூலம் அனைவரோடும் தொடர்புகொள்வதில் புதிய முயற்சி



நைரோபி, ஆக.13- கென்யாவில், காது கேளாதோர் மற்றவர் களுடன் எளிதாக உரையாட உதவும் வகையில், ஒரு புதிய செயலி ஏ அய் உதவியோடு அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ளூர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் சைகை மொழி மொழிபெயர்ப்பு செயலி இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தச் செயலி, பேச் சையும் எழுத்துகளையும் சைகை மொழியாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியின் பிரத்யேக ‘அவதார்’ (avatar) எனப்படும் உருவச் சித்திரத்திற்கு, கென்யாவின் சைகை மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காது கேளாதோருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான தொடர்புத் தடைகளை நீக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இந்தச் செயலி ஆங்கிலத்தை மட்டுமே கென்ய சைகை மொழியாக மொழிபெயர்க்கிறது. ஆனால், எதிர்காலத்தில் உள்ளூர் மொழியான சுவாஹிலியையும் (Swahili) மொழிபெயர்க்கும் ஆற்றலைப் பெறும் என்று நைரோபியில் பணிபுரியும் ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செயலியை உருவாக்கி யவர் தனது படைப்பில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். இந்தச் செயலி ஏற்கனவே சுமார் 2,000 பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இந்தச் செயலியை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment