FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, August 21, 2025

கென்யாவில் காது கேளாதோருக்கான புதிய செயலி ஏ.அய். மூலம் அனைவரோடும் தொடர்புகொள்வதில் புதிய முயற்சி



நைரோபி, ஆக.13- கென்யாவில், காது கேளாதோர் மற்றவர் களுடன் எளிதாக உரையாட உதவும் வகையில், ஒரு புதிய செயலி ஏ அய் உதவியோடு அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ளூர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் சைகை மொழி மொழிபெயர்ப்பு செயலி இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தச் செயலி, பேச் சையும் எழுத்துகளையும் சைகை மொழியாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியின் பிரத்யேக ‘அவதார்’ (avatar) எனப்படும் உருவச் சித்திரத்திற்கு, கென்யாவின் சைகை மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காது கேளாதோருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான தொடர்புத் தடைகளை நீக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இந்தச் செயலி ஆங்கிலத்தை மட்டுமே கென்ய சைகை மொழியாக மொழிபெயர்க்கிறது. ஆனால், எதிர்காலத்தில் உள்ளூர் மொழியான சுவாஹிலியையும் (Swahili) மொழிபெயர்க்கும் ஆற்றலைப் பெறும் என்று நைரோபியில் பணிபுரியும் ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செயலியை உருவாக்கி யவர் தனது படைப்பில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். இந்தச் செயலி ஏற்கனவே சுமார் 2,000 பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இந்தச் செயலியை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment