FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, August 27, 2025

வாய் பேசாத நாடோடி கொலை பெண், மூன்று பேர் கைது

21.08.2025 
கிரேட்டர் கைலாஷ்: வாய் பேச முடியாத நாடோடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நால்வரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 13ம் தேதி அதிகாலை, தென்கிழக்கு டில்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் நாடோடி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். அவர் இஸ்கான் கோவிலுக்கு அருகில் வசித்து வந்த நாடோடி குங்கா என்பதும் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது.

ராஜா திர் மார்க் பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

சம்பவம் நடந்த, 13ம் தேதி அதிகாலை 12:40 மணி அளவில் மூன்று பேர் கொண்ட கும்பல், ஆட்டோவில் இருந்து இறங்கி பூங்காவுக்குள் செல்வதை போலீசார் கண்டறிந்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாடோடி கொலை வழக்கில் துப்பு துலங்கியது.

சம்பவ தினத்தன்று அந்த கும்பலை குங்கா பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூவரும், குங்காவிடம் விசாரித்துள்ளனர். அவர் பதில் கூறாததால், ஆத்திரமடைந்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ஸ்ரீனிவாஸ்புரியில் வசிக்கும் ரஹானா, 44, என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 175 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment