FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, August 27, 2025

வாய் பேசாத நாடோடி கொலை பெண், மூன்று பேர் கைது

21.08.2025 
கிரேட்டர் கைலாஷ்: வாய் பேச முடியாத நாடோடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நால்வரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 13ம் தேதி அதிகாலை, தென்கிழக்கு டில்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் நாடோடி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். அவர் இஸ்கான் கோவிலுக்கு அருகில் வசித்து வந்த நாடோடி குங்கா என்பதும் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது.

ராஜா திர் மார்க் பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

சம்பவம் நடந்த, 13ம் தேதி அதிகாலை 12:40 மணி அளவில் மூன்று பேர் கொண்ட கும்பல், ஆட்டோவில் இருந்து இறங்கி பூங்காவுக்குள் செல்வதை போலீசார் கண்டறிந்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாடோடி கொலை வழக்கில் துப்பு துலங்கியது.

சம்பவ தினத்தன்று அந்த கும்பலை குங்கா பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூவரும், குங்காவிடம் விசாரித்துள்ளனர். அவர் பதில் கூறாததால், ஆத்திரமடைந்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ஸ்ரீனிவாஸ்புரியில் வசிக்கும் ரஹானா, 44, என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 175 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment