FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, August 27, 2025

வாய் பேசாத நாடோடி கொலை பெண், மூன்று பேர் கைது

21.08.2025 
கிரேட்டர் கைலாஷ்: வாய் பேச முடியாத நாடோடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நால்வரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 13ம் தேதி அதிகாலை, தென்கிழக்கு டில்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் நாடோடி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். அவர் இஸ்கான் கோவிலுக்கு அருகில் வசித்து வந்த நாடோடி குங்கா என்பதும் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது.

ராஜா திர் மார்க் பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

சம்பவம் நடந்த, 13ம் தேதி அதிகாலை 12:40 மணி அளவில் மூன்று பேர் கொண்ட கும்பல், ஆட்டோவில் இருந்து இறங்கி பூங்காவுக்குள் செல்வதை போலீசார் கண்டறிந்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாடோடி கொலை வழக்கில் துப்பு துலங்கியது.

சம்பவ தினத்தன்று அந்த கும்பலை குங்கா பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூவரும், குங்காவிடம் விசாரித்துள்ளனர். அவர் பதில் கூறாததால், ஆத்திரமடைந்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ஸ்ரீனிவாஸ்புரியில் வசிக்கும் ரஹானா, 44, என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 175 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment